நடிகை குஷ்பூ கைது!

சிதம்பரம் (27 அக் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில்,  தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.

மேலும்...

பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!

மும்பை (26 அக் 2020): துணிவிருந்தால் எங்கள் அரசை கவிழ்த்துப் பாருங்கள் என்று பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விட்டுள்ளார். சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது. இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:…

மேலும்...

பாஜகவில் புறக்கணிக்கப்படும் ஜோதிராதித்யா சிந்தியா!

புதுடெல்லி (23 அக் 2020): காங்கிஸிலிருந்து வெளியாகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா பாஜவில் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பாஜகவில் பதவிகள் கிடைக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கீழ் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது அதிர்ஷ்டம் என்று சிந்தியா தெரிவித்துள்ளார். “எனக்கு பாஜகவில் எந்த…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மீண்டும் வெடித்த போராட்டம்!

அஸ்ஸாம் (22 அக் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை அடுத்து அசாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து அசாம் மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. . நாடே கொந்தளித்தபோதும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது கோவிட் தான் என்றும், இந்தச் சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்….

மேலும்...

பாஜகவினரை எதிர்ப்பேன் – குஷ்பு அதிரடி!

சென்னை (16 அக் 2020): பெரியாரை விமர்சிக்கும் பாஜகவினரை கட்டயமாக கண்டிப்பேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியாரை இன்றும் மதிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பெரியாரை பாஜகவினர் யாரும் விமர்சித்தால் அதனை கண்டிக்கும்…

மேலும்...

விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு – முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலா?

சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இது “800” என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எழுத்தாளர் ஜெயபாலன், சீமான், பாரதிராஜா, தியாகு, கவிஞர்…

மேலும்...

மத்திய பாஜக அரசின் மற்றுமொரு சாதனை – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (16 அக் 2020): மத்திய அரசின் மற்றும் ஒரு சாதனையாக கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானோடு போட்டி போட முடியவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியிருந்த பொருளாதாரம் கொரோனாவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு தவறிவிட்டதாகவும் பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசை மீண்டும் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான்,…

மேலும்...

12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம் – விசாரணைக்கு உத்தரவு!

போபால் (15 அக் 2020): மத்தியப் பிரதேசத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த மர்ம…

மேலும்...

ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கவேண்டும் – திமுகவினர் ஆர்வம்!

சென்னை (15 அக் 2020): ரஜினி தேர்தலுக்கு முன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலையானால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி…

மேலும்...

நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார்!

மதுரை (15 அக் 2020): நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை…

மேலும்...