வடமாநிலங்களின் தவிற்க முடியாத தலைவராக வளர்கிறார் உவைசி – பிரபல ஊடகவியலாளர் கருத்து!

திருவனந்தபுரம் (13 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி தோல்விக்கு அசாதுத்தீன் உவைசியே காரணம் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று பிரபல மலையாள எழுத்தாளரும், ஊடகவியலாளருமான என்.எஸ்.மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் முஸ்லிம்களின் தவிற்கமுடியாத தலைவராக உவைசி வளர்ந்து வருவதையே பீகாரில் அவரின் வாக்கு சதவீதம் காட்டுகிறது. தேஜஸ்வி தலைமையிலான கூட்டணி வழக்கமான வாக்குகளை பெற்றதாக தெரியவில்லை. அதனை பெற்றிருந்தாலே தேஜஸ்வி கூட்டணி ஆட்சி…

மேலும்...

பாஜகவுடன் ரகசிய கூட்டணி – நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைத்த லோக்ஜனசக்தி!

பாட்னா (11 நவ 2020): பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரித்து நிதிஷ் குமார் கட்சியை மூன்றாவது நிலைக்கு தள்ளியுள்ளது லோக் ஜனசக்தி. பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் பாஜக-ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையிலான…

மேலும்...

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய பீகார் தேர்தல் முடிவுகள்!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும்,…

மேலும்...

முதல்வர் எடப்பாடி மீது எச் ராஜா பாய்ச்சல்!

சென்னை (09 நவ 2020): முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் மட்டும் கொரோனா பரவாதா? என்று எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை குறித்து எச் ராஜா தெரிவிக்கையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் கூட்டத்தில் பரவாத கொரோனா நோய் தொற்று வேல்…

மேலும்...

தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – 6 பேர் கைது!

தூத்துக்குடி (5 நவ 2020): தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகேயுள்ள தெற்கு கோட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமைய்யா தாஸ் (51). பாஜக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலத்தில், தென்திருப்பேரை கோனார் தெருவைச் சேர்ந்த இசக்கி (25) என்பவரின் மாடுகள் மேய்ந்துள்ளது. இதனை ராமையா தாஸ் தட்டிக் கேட்டதால்…

மேலும்...

மதவாத இந்துத்வா பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – மாயாவதி திட்டவட்டம்!

லக்னோ (02 நவ 2020): பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவுடன் இணைவதற்கு பதிலாக அரசியலை விட்டு விலகிவிடலாம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துத்துவத்தையம் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வரும் பாஜகவுடன் பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஒருபோதும் இணைந்து செயல்படாது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாதி கட்சி வரும் தேர்தல்களில் இணைந்து செயல்படும் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவும் பகுஜன் சமாஜ் கட்சியும்இணைய வாய்ப்பே இல்லை. பகுஜன்…

மேலும்...
Supreme court of India

தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை – உச்ச நீதிமன்றம் காட்டம்!

புதுடெல்லி (02 நவ 2020): கமல் நாத்தின் நட்சத்திர பிரசாரகர் உரிமையை பறிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தப்ரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்….

மேலும்...

பாஜகவுடன் நிதிஷ் கூட்டணி முறிவு – பகீர் கிளப்பும் சிராக் பாஸ்வான்!

பாட்னா (02 நவ 2020): பா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விரைவில் விலகுவார் என்று லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். பீகாரில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவருமான சிராக் பாஸ்வான், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் நேரத்துக்கு நேரம் தன் நிலையை மாற்றும் மனநிலை கொண்டவர்….

மேலும்...

எச்.ராஜாவா? எல் முருகனா? – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!

ராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வரும், திமுக சார்பில் முக ஸ்டாலினும், இன்னும் பல கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அது போலவே பாஜக சார்பிலும்…

மேலும்...

பாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்!

ஐதராபாத் (27 அக் 2020): தெலுங்கானா மாநிலம் துபாக் இடைத்தேர்தளுக்கான வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ .18.67 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். .பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் உறவினர் சுராபி அஞ்சன் ராவின் வீட்டில் இருந்து சித்திப்பேட்டை போலீசார் இந்த பணத்தை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றபோது போலீசாரை பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அப்போது அந்த பணத்தில் ரூ .12 லட்சத்தையும் பாஜகவினர் எடுத்துச் சென்றதாகவும், மீதமுள்ள ரூ .5,87,000 லட்சபோலீசாரால்…

மேலும்...