பாஜக தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று!

சென்னை (31 ஆக 2020): பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று இந்தியாவில் பெருமளவில் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...

காங்கிரஸ் எதிர் கட்சியாகத்தான் இருக்கும் – காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பகீர் கருத்து!

புதுடெல்லி (30 ஆக 2020): காங்கிரசுக்‍கு புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என அக்‍கட்சியின் மூத்த தலைவர் திரு. குலாம்நபி ஆசாத் கூறியுளளார். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டால், தாம் பெரும் மகிழ்ச்சியடைவேன் என்றும், புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என்றும் திரு. குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே…

மேலும்...

ஆதரவு ரஜினிக்கு..! சேர்ந்தது பா.ஜ.க-வில்!.!

சென்னை (25 ஆக 2020): ரஜினி ஆதரவாளரான முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, பாஜகவில் இணைந்தார். தமிழ்நாட்டின் கரூரில் இருந்து வந்த முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி, பெங்களூரு தெற்கில் துணை போலீஸ் கமிஷனராகவும், உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். பல ஆண்டுகளாக காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய பின்னர், 2019 ல் நெருங்கிய நண்பர் இறந்ததைத் தொடர்ந்து குப்புசாமி தனது வேலையை விட்டு விலகினார். பின்னர் அவர் தனது சொந்த…

மேலும்...

அதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே?

சென்னை (12 ஆக 2020): சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன., பலர் தங்களது கட்சிகளிலிருந்து அடுத்த கட்சிகளுக்கு தாவ தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு பாய்ந்த நயினார் நாகேந்திரன்தான் இப்போது டைம் லைனில் உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நவாஸ் கனியிடம் தோல்வியை சந்தித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர் பார்த்து காய் நகர்த்திய நயினாருக்கு அது…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (09 ஆக 2020): திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையப்போவதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கு.க.செல்வத்தைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து மேலும் பலர் பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்க உள்ளனர் என்றும், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பெயர்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் , “கடந்த சில…

மேலும்...

அண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ!

சென்னை (08 ஆக 2020): திமுகவை சேர்ந்தவர்கள் மற்ற கட்சிக்காரங்களை சந்திக்கக் கூடாது என்றா எந்த விதியும் இல்லை என்று என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தது தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்கும் முன்னரே கட்சியில் இருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள…

மேலும்...

எஸ்.வி.சேகர் மானம், ரோஷம் உள்ளவரா? – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

சென்னை (05 ஆக 2020): நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர்  சமீபத்தில் அதிமுக-வை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் எஸ்.வி.சேகரின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தெரிவித்ததாவது: ”மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா தான் இவரை அடையாளம் காட்டினார். அந்த தொகுதியில் இவர் எந்தக் கொடியை காட்டி ஓட்டு வாங்கினார்? அதிமுக கொடி, அண்ணா பெயரை சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான ரோஷம் சூடு இருந்தால் அந்த ஐந்து…

மேலும்...

திமுக எம்.எல்.ஏவுக்கு திமுக தலைமை நோட்டீஸ்!

சென்னை (05 ஆக 2020): பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்திற்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ, கு.க.செல்வம், நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கு.க.செல்வம், “ராமர் கோயிலுக்குப் பூமி பூஜை நடத்தும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம்…

மேலும்...

இராமர் நேபாளத்தில் பிறந்ததை நிரூபிப்போம் – நேபாள அரசு மீண்டும் அதிரடி!

காத்மண்டு (19 ஜூலை 2020): இராமர் நேபாளத்தில் பிறந்ததை தொல்லியல் அகழாய்வு மூலம் நிரூபிக்கவுள்ளதாக நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, இந்து கடவுளான இராமர் அவதரித்த இடம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. அந்த இராமனை முன் வைத்து பாஜக ஆட்சிக் கட்டில் ஏறியது. ஆனால் இராமர் பிறந்த அயோத்தி நகரம் இருப்பது நேபாள நாட்டின் எல்லையோர நகரமான பிர்கஞ்ச் அருகேயுள்ள தோரி கிராமத்தின் அருகே இருக்கிறது என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி…

மேலும்...

தமிழகத்தில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம்: ஸ்டாலின் கிண்டல்

சென்னை (16 ஜூலை 2020):தமிழகத்தில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக புதனன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ‘இராணுவத்தில் தமிழர்கள் பங்கு’ என்ற பாடத்தை நீக்குகிறார். வெறும் பேச்சு மட்டும்தானா? தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லைப் போராட்டம் ஆகிய பாடங்களை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்தால் தமிழ் மண்ணில் நோட்டாவைத்…

மேலும்...