இந்தியாவின் ஹிஜாப் விவகாரத்திற்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம்!
புதுடெல்லி (15 பிப் 2022): இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் முஸ்லிம் பெண்களை துன்புறுத்தும் சம்பவங்கள் குறித்தும், கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான…