ஹிஜாப் அணிந்து கல்லூரி சென்ற மாணவி மீது ஏபிவிபி உறுப்பினர்கள் துன்புறுத்தல்!

மங்களூரு (05 மார்ச் 2022): கர்நாடகா மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி ஹிஜாப் அணிந்ததற்காக அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். பி. சதீஷா பாய் அரசு முதல் தர கல்லூரி மாணவி ஹிபா ஷேக், அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் தன்னை துன்புறுத்தியதாக பந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “நான்  கல்லூரியில் தேர்வு…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – தேர்வு எழுத முடியாத நிலையில் கர்நாடக முஸ்லிம் மாணவிகள்!

பெங்களூரு (24 பிப் 2022): ஹிஜாப் தடை விவகாரத்தால் கர்நாடக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத தயாராக இல்லை என தெரிவித்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, மாணவர்கள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே எஸ்எஸ்எல்சி (10ஆம் வகுப்பு) மற்றும் (12ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவான மனுதாரரின் தந்தையின் உணவகம் மீது தாக்குதல்!

உடுப்பி (23 பிப் 2022): பள்ளி கல்லுரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளவர்களில் ஒருவரான ஹஸ்ரா ஷிஃபாவின் தந்தைக்கு சொந்தமான உணவகத்தின் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஜாபுக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஹிஜாப் வழக்கின் மனுதாரர்களில் ஷிஃபாவும் ஒருவர். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் தான் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் மனுதாரர் ஹஸ்ரா ஷிஃபாவின் சகோதரர் உணவகத்தை மூடும் போது அங்கு வந்த…

மேலும்...

ஹிஜாப் பிரச்சினையை கிளப்பிய வார்டில் பாஜக டெபாசிட் இழப்பு!

மதுரை (22 பிப் 2022): மதுரை மேலூரில் வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தில் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாபை கழற்றச் சொன்ன வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாஜக அங்கு டெபாசிட் இழந்தது. மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அமைக்கப்பட்ட 44 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மேலூரில் உள்ள சுந்தரேஸ்வர வித்யாலயா பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8வது வார்டில் திமுக வேட்பாளரான முகமது யாசின் (சேர்மன் வேட்பாளர்)…

மேலும்...

பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத் தனமானது – ஜவாஹிருல்லா!

சென்னை (21 பிப் 2022): பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத் தனமானது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கும் கர்நாடக பாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள், எழுத்தாளர்கள்ள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட சமூக நல்லிணக்கத்தை நேசிக்கும் அனைத்து இந்தியர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் தமது…

மேலும்...

கர்நாடகாவில் பஜ்ரங்தளை சேர்ந்தவர் கொலை – முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பிய வன்முறை!

ஷிமோகா (21 பிப் 2022): கர்நாடகாவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 26 வயதான ஹர்ஷா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகாவில் பஜ்ரங் தள் பிரமுகரான ஹர்ஷாவைக் கொன்றது யார் என்பதில் தெளிவு இல்லாத நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினரும் மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களும் இந்தக் கொலைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஷிமோகா பகுதியில் பல…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

சியாட்டில் (21 பிப் 2022): கர்நாடகாவில் சர்ச்சையை கிளம்பியுள்ள ஹிஜாப் தடை விவகாரம் நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது ஹிஜாபுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் சியாட்டில், டெக்சாஸ், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், வட கரோலினா, மிச்சிகன், நியூயார்க் மாநிலம், நியூ ஜெர்சி, புளோரிடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக, கர்நாடகாவில் உள்ள ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகளில் ஹிஜாப்…

மேலும்...

ஹிஜாப் முஸ்லீம் பெண்களின் முக்கிய கடமை – முன்னாள் நடிகை கருத்து!

புதுடெல்லி (20 பிப் 2022): ஹிஜாப் என்பது முஸ்லீம் பெண்கள் இறைவனுக்கு செய்யும் முக்கியமான கடமை என்று டங்கல் பட நடிகை சாய்ரா வசிம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உருவாகியுள்ள ஹிஜாப் விவகாரம் நாடெங்கும் பேசுபொருளாகியுள்ளது.பல பிரபலங்கள் ஹிஜாப் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நடிகை சாய்ரா வசிம் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹிஜாப் ஒரு தேர்வு மட்டுமல்ல, அது கடவுளுக்கு செய்யும் ஒரு கடமை,” என்று…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – மாணவிகள் கல்லூரியிலிருந்து இடை நீக்கம்?

பெங்களூரு (19 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா கல்லூரியிலிருந்து 58 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கல்லூரி முதல்வர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஷிவமோகா மாவட்டத்தில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய கர்நாடகா கல்லூரி மாணவர்கள் 58 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தி இணையத்தில் வெளியானது. கல்லூரி விதிகளை மீறியதால் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக முதல்வர் மாணவர்களிடம் கூறிய வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன. “துணை எஸ்பி உள்ளிட்டோர் மாணவிகளை சமாதானப்படுத்த…

மேலும்...

மதுரை அருகே முஸ்லீம் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறிய பாஜக பூத் ஏஜெண்ட்!

மதுரை (19 பிப் 2022): மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் முஸ்லீம் பெண் வாக்காளர்களின் ஹிஜாபை அகற்றக் கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை அகற்ற சொல்லி பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது…

மேலும்...