கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாயாக்கும் சவூதி அரேபியா!

ரியாத் (22 ஆக 2021): கோவிட் கட்டுப்பாடுகளை மீறி குடும்ப கூட்டங்கள் நடத்தினால் 10 ஆயிரம் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும். என்று சவூதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சவூதி அரேபியாவில் கோவிட் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அது மேலும் பரவாமல் தடுக்க சவூதி அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது அதன்படி அதிகப்படியாக கூடும் கூட்டங்களால்தான் கோவிட் பவரால் அதிகரிக்கிறது என்பதால் கூட்டம் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதியில் குடும்ப நிகழ்வுகளுக்கு…

மேலும்...

3 டோஸ் கொண்ட சைகோவ்- டி கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி!

புதுடெல்லி (20 ஆக 2021): 3 டோஸ் கொண்ட சைகோவ்- டி கொரோனா தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவை தடுக்கும் வகையில் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முடுக்கி விட்டுள்ளது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதேபோல் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது…

மேலும்...

கொரோனா வந்து மீண்டவர்களுக்கு நற்செய்தி!

லண்டன் (20 ஆக 2021): கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு தடுபூசிகள் கூடுதல் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேகமாக பரவுகிற திறன் கொண்டுள்ள டெல்டா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா என்பது தொடர்பாக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி உள்ளனர். மே மாதம் 17-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 1-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 983 பேரிடம் இருந்து…

மேலும்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

புதுடெல்லி (19 ஆக 2021): இந்தியாவில் நேற்று கொரோனா உயிரிழப்பு நேற்று முன் தினத்தை விட சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (19.08.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 3,23,22,258 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 36,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 39,157 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,25,080 ஆக உயர்ந்துள்ளது….

மேலும்...

மக்கா ஹரம் பள்ளிக்குள் செல்ல 12 வயதுக்கு மேல்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி!

மக்கா (19 ஆக 2021): மக்காவில் உள்ள ஹராம் மசூதிக்குச் செல்ல குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர். அனுமதி கிடைத்த பிறகு, பல குழந்தைகள் ஹராம் மசூதிக்கு சென்று உம்ரா செய்து பிரார்த்தனை செய்தனர். கோவிட் பரவலை அடுத்து, ஹராம் மசூதிக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமலிருந்தனர். இதனை அடுத்து படிப்படியாக கோவிட் பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக குறைந்த அளவில் குழந்தைகள் அல்லாத உள் நாட்டு உம்ரா யாத்திரீகர்கள் மட்டும் மக்காவிற்கு அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி திட்டம் தொடங்கிய பிறகு அது…

மேலும்...

விடுப்பில் இந்தியா சென்று சவூதி வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலத்தை செப்டம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவு!

ரியாத் (17 ஆக 2021): சவூதியிலிருந்து விடுப்பில் ஊர் சென்று திரும்ப வரமுடியாமல் உள்ளவர்களின் விசாக்காலம் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காலாவதியானவர்களின் குடியுரிமை அட்டை, (இக்காமா) காலமும் செப்டம்பர் 31 வரை புதுப்பிக்கப்படுவதாக சவூதி பாஸ்போர்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து, சவுதி அரேபியா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானங்களை தடை செய்துள்ள நிலையில் அவர்களுக்கு இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சவுதி…

மேலும்...

முஹர்ரம் பண்டிகை ஊர்வலங்களுக்குத் தடை!

லக்னோ (15 ஆக 2021): உத்தரபிரதேச அரசு முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தடை விதித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் பரவல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தடை விக்கப்பட்டுள்ளது. அதேவேளை வீடுகளில் நடத்தப்படும் ‘தஜியா’ மற்றும் ‘மஜாலிஸ்’ ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் நிர்வாகம் சனிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது, மொஹர்ரம் சமயத்தில் எந்த மத ஊர்வலங்களையும் எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட அதிகாரிகளை…

மேலும்...

அமெரிக்காவில் குழந்தைகள் அதிக அளவில் கொரோனாவால் பாதிப்பு!

நியூயார்க் (15 ஆக 2021): அமெரிக்காவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் குழந்தைகள் அதிக அளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில்கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 1,900-க்கு மேல் அதிகரித்துள்ளது. இவர்களுக்கு டெல்டா வகை கொரோனாவே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க மக்கள்தொகையில் பெரும்பாலும் தடுப்பூசி போடப்படாத பகுதியில் கொரோனா டெல்டா மாறுபாடு, வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

சவூதி விசிட் விசா செல்லுபடி காலம் நீட்டிப்பு!

ரியாத் (14 ஆக 2021): சவுதிக்கு வரும் வெளிநாட்டினரின் காலாவதியான விசிட் விசா செல்லுபடி காலம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கான நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படாத நாடுகளில் இருந்து பலர் சவூதி திரும்ப முடியாமல் உள்ளனர். இந்நிலையில் சிலருக்கு விசிட் விசா உள்ளிட்ட விசாக்கள் காலாவதியாகியுள்ள நிலையில் அவர்களின் விசா செல்லுபடி காலம் வரும் செப்டம்பர் 30 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சவுதி வருகைக்கு தற்காலிக தட்டி விதிக்கப்பட்டுள்ள பட்டியலில்…

மேலும்...

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்பவர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய கட்டுப்பாடுகள்

புதுடெல்லி (13 ஆக 2021): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இந்தியாவிலிருந்து புறப்படும் பயணிகள் விரைவான பிசிஆர் சோதனை செய்வதற்கு ஏதுவாக குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வரவேண்டும். என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் விரைவான ஆய்வு தொடங்கும். விரைவான சோதனைச் சாவடிகள் விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மூடப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து…

மேலும்...