ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இன்று முதல் RTPCR சோதனை கட்டாயம்!

புதுடெல்லி (01 ஜன 2023): இன்று முதல், கோவிட்-19 பரவல் அதிகமாக உள்ள ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் முடிவை ஏர் சுவிதா போர்டல் மூலம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். இன்று முதல் விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். ஏற்கனவே…

மேலும்...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதல்கள்!

புதுடெல்லி (28 டிச 2022): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (யுஏஇ) இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளின் கோவிட்-பாதுகாப்பு நடத்தை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கோவிட்-19 க்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரை அறிவுறுத்துகிறது. பயணத்தின் போது எடுக்க வேண்டிய மற்ற முன்னெச்சரிக்கைகளில் முகமூடிகளின் பயன்பாடு மற்றும் உடல் இடைவெளி ஆகியவை அடங்கும். கோவிட் -19 க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு…

மேலும்...

மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து ஜனவரி இறுதிவாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும்!

புதுடெல்லி (28 டிச 2022): கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மூக்‍கு வழியாக செலுத்தப்பபடும் கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை தனியார் மருத்துவமனைகளுக்‍கு 800 ரூபாய்க்‍கும், அரசு மருத்துவமனைகளுக்‍கு 325 ரூபாய்க்‍கும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மூக்‍கு வழியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக்‍ பெற்றுள்ளது. இந்நிலையில், இன்கோவேக் என்ற மூக்‍கு வழி…

மேலும்...

அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னை (26 டிச 2022): தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆறு மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்குமாறும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவசரகால பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் போன்ற தீவிர சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும்…

மேலும்...

வெளிநாட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு கோவிட் பாதிப்பு!

பாட்னா (26 டிச 2022): பீகாரில், வெளிநாட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும். மியான்மர், தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பீகாரில் உள்ள கயா விமான நிலையத்திற்கு வந்த 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிப்புக்கு மாற்றப்பட்டனர். விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவிட் பரவி வரும் சூழலில் நாளை இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள பயிற்சிக்கான…

மேலும்...

ஓமிக்ரான் BF.7 பரவலும் புதிய வழிகாட்டு முறைகளும்!

புதுடெல்லி (23 டிச 2022): உலகெங்கிலும் கொரோனா ஒரு பொது சுகாதார சவாலாகத் தொடர்கிறது, இப்போது ஓமிக்ரானின் புதிய மாறுபாடு, BF.7 பற்றிய பயம், மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றவும் தூண்டியுள்ளது. கொரோனா சோதனை பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும், எப்போது சோதனை செய்யலாம் மற்றும் நீங்கள் செய்யக்கூடிய சோதனைகள் என்ன என்பது குறித்த விவரங்கள் இங்கே.. இந்தியாவில் கொரோனாவுக்கான பர்போசிவ் டெஸ்டிங் ஸ்ட்ரேடஜி குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி…

மேலும்...

கொரோனா குறித்து தேவையற்ற அச்சத்தை பரப்ப வேண்டாம் – இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை!

புதுடெல்லி (22 டிச 2022): கோவிட் குறித்து தேவையற்ற அச்சத்தை பரப்ப வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட் பற்றி தேவையற்ற அச்சம் இருப்பது நல்லதல்ல, ஏனெனில் இது உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்டகால நோயாக இருக்கும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் பல நோய்களைப் போலவே கோவிட் பரிசோதனைகள் பரவலாக நடத்தப்பட வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள், அந்நியர்களுடன் நீண்ட நேரம் பேசுபவர்கள் ஆகியோர் முகமூடிகளை அணிய…

மேலும்...

இந்தியாவில் புதிய மாறுபாடு கொரோனா பாதிப்பு – விமான நிலையங்களில் மீண்டும் கோவிட் பரிசோதனை!

புதுடெல்லி (21 டிச 2022): சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு தொற்று கண்டுடறியப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கோவிட் பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதேவேளை தற்போது விமான சேவைக்கு எந்த தடையும் இல்லை. இதற்கிடையே சீனாவில் தற்போது பரவி வரும்…

மேலும்...

சீனாவை அச்சுறுத்தும் கோவிட் மரணங்கள்!

பெய்ஜிங்(21 டிச 2022): மீண்டும் கோவிட் 19 இறப்புகள் சீனாவை பயமுறுத்துகின்றன. 142 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சீனாவில் கோவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,242 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 3 முதல் நாட்டில் தேசிய சுகாதார ஆணையம் (NHC) தெரிவித்த கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை இவை. கோவிட் காரணமாக இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அரசாங்கம் வெளியிடுகிறதா என்கிற சந்தேகமும் சீனாவின் மீது உள்ளது. டிசம்பர் 19 அன்று சீனாவில் 2,722 புதிய கோவிட்…

மேலும்...

ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற சுகாதாரக் குழு பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (13 செப் 2022): இந்தியாவில் கோவிட் பாதிப்பால் அதிகமானோர் உயிரிழக்க ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே கரணம் என்று நாடாளுமன்ற சுகாதாரக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழு தனது 137வது அறிக்கையினை திங்கள்கிழமை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது. அதில் , “கோவிட்டால் உலகிலேயே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது, ​​நாட்டின் சுகாதார அமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்தன. இதனால் கோவிட் பாதிப்பு அதிகரித்து இறப்புகள் அதிகரித்தன,…

மேலும்...