தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா!

சென்னை (07 ஆக 2021): தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்பை விட இன்று கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. அதேவேளை 5 மாவட்டங்களில் தொடர்ந்து சதமடித்துக் கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்கு காரணமாக கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும்…

மேலும்...

ஃபைசர் கோவிட் தடுப்பூசியால் கண் அழற்சி (வீக்கம்) – இஸ்ரேலிய ஆய்வு!

ஜெருசலேம் (06 ஆக 2021): ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு யுவேடிஸ் எனப்படும் கண் அழற்சியின் வீக்கம் உள்ளதாக இஸ்ரேலிய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்து ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு மருத்துவமனையின் யுவேடிஸ் சர்வீஸின் தலைவரான ஹபோட்-வில்னர் அளித்துள்ள விளக்கத்தில், “, ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்ற 21 பேருக்கு முதல் ஷாட் கிடைத்த 14 முதல் 14 நாட்களுக்குள் கண் அழற்சியுடன் கூடிய வீக்கம், யுவைடிஸை உருவாகியதைக் கண்டறிந்தோம். இதனைத்…

மேலும்...

கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு தடை!

ஜெனிவா (05 ஆக 2021): கொரோனா  வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி இடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார அமைப்பு  கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் விடுத்துள்ள கோரிக்கையில், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது, கோவிட் பரவலைத் தடுப்பதில் பயன் தருமா என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும்  ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய பணக்கார…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவலாம்!

துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர்….

மேலும்...

இந்தியாவிலிருந்து துபாய் செல்ல விமானங்களுக்கு டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இத் தடையை நீக்கியுள்ள அமீரகம், இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கான விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்…

மேலும்...

துபாய், இந்தியா இடையேயான பயணத் தடை நீக்கம்!

துபாய் (03 ஆக 2021): இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்குகிறது. கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக விமானப் பயணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கியுள்ள அமீரகம் , இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக விசா வைத்திருப்பவர்கள் துபாய்க்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் இது அமலுக்கு வருகிறது. கோவிட் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியா,…

மேலும்...

கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்!

ரியாத் (02 ஆக 2021): சவூதியில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை சவூதி சுகாதரத்துறை விதித்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கோவிட் தடுப்பூசியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் வேலைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேலை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தபடி பணிபுரியலாம். அதற்குள் தடுப்பூசி பெறவில்லையெனில் கட்டாய விடுப்பு அளிக்கப்படும்…

மேலும்...

தமிழகம் முழுவதும் கோவில்களில் தரிசனத்திற்கு தடை!

சென்னை (01 ஆக 2021): தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா 3 ஆம் அலை பரவல் அச்சம் இருப்பதால், தொடக்கத்திலேயே அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு…

மேலும்...

பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டு உம்ரா யத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (31 ஜுலை 2021): கோவிட் பரவல் காரணமாக பயணத் தடை செய்யப்பட்ட நாடுகளை தவிர மற்ற நாடுகளிலிருந்து உம்ரா யாத்ரீகர்கள் வருவதற்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு சவூதி அரேபியா விமான தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்…

மேலும்...

சவூதி அரேபியாவில் கொரோனா காரணமாக இந்தியாவின் 6 மாத கர்ப்பிணிப் பெண் மரணம்!

கத்தீப் (31 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவை சேர்ந்த 6 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி காதா(வயது-27) ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தாமாம் அருகிலுள்ள கத்தீப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதாவின் உடல்நிலை மோசமடைந்ததால், குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை…

மேலும்...