கொரோனாவை விட கொடியது மத வெறுப்பு பிரச்சாரம் – திருமாவளவன் பொளேர்!

சென்னை (03 ஏப் 2020): கொரோனா வைரஸை விட கொடியது மத வெறுப்பூட்டும் பிரச்சாரம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தப்லீக் ஜமாத் அமைப்பின் சாா்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்றவா்கள் தாமே முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு…

மேலும்...

மதத்தலைவர்களுடன் தலைமை செயலர் அவசரக் கூட்டம்!

சென்னை (03 ஏப் 2020): சென்னை தலைமை செயலர் அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று (03/04/2020) மாலை 03.00 மணிக்கு அனைத்து மத தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.கரோனா விவகாரத்தில் மதச்சாயம் பூசப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே மாவட்டங்களில் மத தலைவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்யவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும்...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!

ஜெரூசலம் (02 ஏப் 2020): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமி நெதன்யாகுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதனை அடுத்து…

மேலும்...

நாடாளுமன்றம், சட்டமன்றம் கூட்டியவர்கள் மீது வழக்கு போடுவீர்களா?: ஆளூர் ஷாநவாஸ் சரமாரி கேள்வி!

சென்னை (02 ஏப் 2020): கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு கூடிய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை கூட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்று ஆளுர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா அதிக அளவில் பரவி வருகின்றது. இந்தியாவில் 50 க்கும்…

மேலும்...

ஈஷா யோகா மையத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமை படுத்தப் பட்ட 150 பேர் – வெளிவராத உண்மைகள்!

கோவை (02 ஏப் 2020): கோவை ஈஷா யோகா மையத்தில் 150 பேர் தனிமை படுத்தப் பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா உண்மையில் பரவ காரணம் என்ன? என்பதை கவனத்தில் கொள்ளாத அரசும் ஊடகங்களும் தேவையில்லாத தகவல்களை பரப்பி…

மேலும்...

ஒரு சூழலிலும் இந்திய சட்டத்தை மீறவில்லை – தப்லீக் ஜமாத் பிரமுகர் விளக்கம்!

கோவை (02 ஏப் 2020): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாத் பிரமுகர் அங்கு நடந்த சூழல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகின் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலியையும், பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு 2000 ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் கொரோனா பரவ…

மேலும்...

ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு கவலை!

ஜெனீவா (02 ஏப் 2020): கொரோனா உயிரிழப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகம் முழுவதையும் விழிபிதுங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 935,840-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 194,286 மீண்டுள்ளனர். இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே…

மேலும்...

கொரோனா நிதியுதவியாக ரூ.1,125 கோடி வழங்கும் விப்ரோ, அசிம் பிரேம்ஜி!

புதுடெல்லி (02 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணிகளுக்காக விப்ரோ நிறுவனம் சார்பிலும் மற்றும் அதன் நிறுவனர் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையும் இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,125 கோடி வழங்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவிலும்  இந்தியாவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களுக்குத் தீவிரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா நிதியாக…

மேலும்...

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் ஆல் பாஸ் – மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (01 ஏப் 2020): 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்சி பெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாடு முமுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும் நடைபெற வேண்டிய தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு…

மேலும்...

ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்கும் ஓட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ்!

ஈரோடு (01 ஏப் 2020): கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவற்றில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றோர் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் ஆதரவற்றோருக்கு இரண்டு வேளை இலவசமாக உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இடையான்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ்….

மேலும்...