ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோருக்கு இலவச உணவு வழங்கும் ஓட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ்!

Share this News:

ஈரோடு (01 ஏப் 2020): கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, அவற்றில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றோர் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் ஆதரவற்றோருக்கு இரண்டு வேளை இலவசமாக உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இடையான்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்தி விக்னேஷ். பொறியியல் பட்டதாரியான இவர், அப்பு ஹோட்டல் என்ற பெயரில் ஹோட்டல் வைத்துள்ளார்.

இவர் தன்னார்வலர்கள் மூலம் ஈரோட்டில் உள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பணியை கடந்த 25 ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகிறார்.


Share this News:

Leave a Reply