அதிராம்பட்டினத்தில் யாருக்கும் கொரோனா இல்லை – வதந்தி பரப்புபவர்களுக்கு விஏஓ எச்சரிக்கை!
தஞ்சாவூர் (30 மார்ச் 2020): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை என வி.ஏ.ஓ தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. எனினும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா பரவாமல் தடுத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் சில விஷமிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் அதிராம்பட்டினத்திற்கு வருகை புரிய அருகில் உள்ள கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்….