சேதமடைந்த மெரீனா மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை இன்று மீண்டும் திறப்பு!

சென்னை (16 டிச 2022): புயலால் சேதமான மெரீனா மாற்றுத் திறனாளிகள் மரப்பாதை மறு சீரமைக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது. ரூ.1.14 கோடி செல்வில் அமைக்கப்பட்ட இந்த பாதை நவம்பர் 27ல் திறக்கப்பட்டது. இது சமீபத்தில் ஏற்பட்ட மாண்டோஸ் புயல் காரணமாக ஒரு பகுதி சேதமடைந்தது. இந்நிலையில் சீரமைப்புப் பணிக்காக மரப்பாதை வழி மூடப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து இன்று இந்த மரப்பாதை மீண்டும் திறக்கப்படுகிறது.

மேலும்...

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்ட பொறியாளர்!

கோவை (15 டிச 2022): கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை மொத்தமாக இழந்த இளம் பொறியாளர் ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் பெயர் சங்கர். 29 வயது வாலிபர். சடலத்தின் அருகே தற்கொலைக் கடிதம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் தனது சேமிப்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கிய தொகையை இழந்ததால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில்…

மேலும்...

இனி நடிக்கப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (14 டிச 2022): தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். உதயநிதி இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழா இன்று காலையில் நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்று கொண்டார். இவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப் பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் உதயநிதி உதயநிதி பேசினார். அதில், “இனி சினிமாவில் நடிக்கப்…

மேலும்...

தமிழக அமைச்சரவையில் மாற்றம் – பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பு!

சென்னை (14 டிச 2022):தமிழ்நாடு அமைச்சரவை, இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக தேர்வாக உள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் நாளை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன்பின், பல்வேறு அமைச்சர்களின் இலக்காக்கள் மாற்றப்பட உள்ளன. இந்த இலாக்கா மாற்றத்தின்போது புள்ளியில் துறை-யைக் கூடுதலாக கவனித்து வரும் ஐ பெரியசாமியிடம் இருந்து,…

மேலும்...

அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

சென்னை (14 டிச 2022): அரபிக்கடல் பகுதியில் கேரளா, கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதுகுறித்து சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரபிக்கடல் பகுதியில் கேரளா,கர்நாடகாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக,…

மேலும்...

துபாய் ஹோட்டலில் சந்தித்த நபர் – அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

சென்னை (14 டிச 2022): துபாய் ஹோட்டலில் நான் சந்தித்ததாக கூறப்படும் நபர் குறித்து அண்ணமலை பதிலளிப்பார் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். திருச்சி சூர்யா – டெய்சி ஆபாச ஆடியோ விவகாரத்தில் பாஜகவிலிருந்து 6 மாதம் நீக்கப்பட்டுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். தற்போது பாஜக குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் காயத்ரி ரகுராம். இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் காயத்ரி ரகுராம், “முதலில் நான் சென்னை சோமர்செட் ஓட்டலில் சந்தித்ததாக தவறான முறையில்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராகும் அமர் பிரசாத் ரெட்டி?- அதிர்ச்சியில் அண்ணாமலை!

சென்னை (13 டிச 2022): தமிழக பாஜக தலைவராவதற்காக அமர் பிரசாத் ரெட்டி காய் நகர்த்தி வருவதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆபாச ஆடியோ விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமான திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் பாஜகவிலிருந்து விலகிய பின்பு பாஜக தலைவர்கள் பலர் மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். குறிப்பாக ஆர் எஸ் எஸ் கேசவ விநாயகம் என்பவர் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில் யூடூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள…

மேலும்...

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (13 டிச 2022): திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்கும் பரிந்துரை கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கடந்த 10ஆம் தேதி கவர்னர் ஆர்.என். ரவிக்கு எழுதினார். இந்தக் கடிதத்தை முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் கவர்னரிடம் கொண்டு சென்றார். முதல்வரின் பரிந்துரையை ஏற்ற ஆளுநர், உதயநிதிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இந்தப் பதவிப் பிரமாணம் ஆளுநர் மாளிகையில் டிசம்பர்…

மேலும்...

சூதாட்டமும் மகாபரதமும் – திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை (13 டிச 2022): சென்னை வள்ளுவர்கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கருக்கும் காவி ஆடை, திருநீறு மற்றும் குங்குமம் இட்டு அவமதிக்கும் அமைப்புகளைக் கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவள்ளுவர், பெரியார், அண்ணா போன்றோரைக் கொச்சைப்படுத்திய சங்பரிவார் கும்பல் தற்போது அம்பேத்கரையும் கொச்சைப்படுத்தியுள்ளது. அவரது நினைவு நாளன்று அவரது உருவப்படத்திற்கு திருநீறு…

மேலும்...

யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்!

கொழும்பு (12 டிச 2022): யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவையை இலங்கை மீண்டும் தொடங்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட விமானச்சேவை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. இலங்கை விமான நிலைய அதிகார சபையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு அலையன்ஸ் ஏர் வாரத்திற்கு நான்கு முறை செயல்படும். சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாண விமான நிலைய ஓடுபாதை மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது 75…

மேலும்...