டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர் கான்!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் 18 நாள் குழந்தையின் தந்தை முதஸ்ஸர்கானும் ஒருவர். தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 46 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்த பல்வேறு சோக பின்னணிகளும் வெளிவரவத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி ஷிவ் விஹார் பகுதியில் கொலை வெறி பிடித்தவர்களின் இரத்தப் பசிக்கு,…

மேலும்...

பாலியல் குற்றவாளியான பாஜக எம்.எல்.ஏ கொலை குற்றவாளி என்றும் நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடெல்லி (04 மார்ச் 2020): உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்ததும் முன்னாள் பா.ஜ., தலைவர் குல்தீப்சிங் செங்கார் தான் என்று டெல்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உன்னாவ் சட்டமன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற 19 வயது இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார். இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அந்தப் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த…

மேலும்...

டெல்லி கலவரத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு அளித்த முஸ்லிம்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): டெல்லி கலவரத்தில் வன்முறை கும்பலால் பாதிக்கப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு அளித்துள்ளார் அய்யூப் அஹ்மது என்ற முஸ்லிம். டெல்லியில் கடந்த வாரம் சிஏஏ எதிர்ப்பு போராட்டக் காரர்களிடம், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற பெயரில் புகுந்த வன்முறை கும்பல், நடத்திய இனப்படுகொலையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர், 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் வன்முறை நடந்தபோது, ஒரு வீட்டுக்குள் நுழைந்த கும்பல் 45 வயது மதிக்கத்தக்க…

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): டெல்லி மற்றும் தெலங்கானாவில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்கனவே, கேரளாவில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது டெல்லி மற்றும் தெலங்கானாவுக்கு தலா ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கரோனா பாதித்த இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் தீவிர மருத்துவக்…

மேலும்...
shaheen-bagh

டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்களுக்கு இந்துத்வா அமைப்பு மீண்டும் மிரட்டல்!

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்த இந்து சேனா இந்துத்வா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணம் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் வெறுப்பூட்டும் பேச்சும், மூன்று நாட்கள் அவகாசத்தில் போராட்டக் காரர்களை அப்புறப்படுத்துவோம்…

மேலும்...

டெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம்.

மேலும்...

மத்திய அமைச்சரின் சுட்டுத் தள்ளுங்கள் (கோலி மாரோ) வாசகம் இன்றும் தொடரும் அவலம்!

புதுடெல்லி (29 பிப் 2020): மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் சுட்டுத் தள்ளுங்கள் என்ற சொல் இன்றும் வன்முறையாளர்களால் தொடரப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அமைதி திரும்பியதாக போலீஸ்…

மேலும்...

டெல்லி இனப்படுகொலையில் கொல்லப்பட்ட சகோதரர்கள் ஹாஷிம் மற்றும் ஆமிர்!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி இனப் படுகொலையில் கொல்லப்பட்ட அண்ணன் தம்பி இருவரின் உடல் நீண்ட ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. டெல்லியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் மஜ்பூர், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இந்துத்துவ தீவிரவாதிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் 42 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீவிரவாதத்தில் 27 வயது ஆமிரும் அவருடைய தம்பி 17 வயது ஹாஷிமும் இந்தத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது கொடூரத்தின் உச்சம்….

மேலும்...

டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் முஹம்மது அனீஸ் வீடு எரிப்பு!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி கலவரத்தில் எல்லை பாதுகாப்பு வீரர் ஜவான் அனீஸ் வீடும் வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ள்னர்.. பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் டெல்லி வட கிழக்கு பகுதியில் இருந்த எல்லை பாதுகாப்பு வீரர் (BSF) முஹம்மது அனீஸ் வீடும் எரித்து…

மேலும்...

கொடூரர்கள் இருக்கும் கட்சியில் இனி நான் இருக்கப்போவதில்லை – பிரபல நடிகை பாஜகவிலிருந்து விலகல்!

புதுடெல்லி (29 பிப் 2020): கொடூர சிந்தனை கொண்ட கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது எனக் கூறி பா.ஜ.க-விலிருந்து விலகியுள்ளார் மேற்கு வங்க நடிகையும் அரசியல்வாதியுமான சுபத்ரா முகர்ஜி. இவர் மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற டிவி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். பல்வேறு சீரியல்கள், விளம்பரங்கள் என நடித்து வந்த சுபத்ரா 2013-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில்தான் பா.ஜ.க-வின் போக்கு தற்போது மாறிவிட்டது எனக் காரணம் கூறி, அந்தக்…

மேலும்...