பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிக்கான அறிவிப்பு எங்கே? – ப.சிதம்பரம் அதிர்ச்சி கருத்து!

புதுடெல்லி (18 மே 2020): கொரோனா வைரஸுக்கு பின்னான காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, 20 லட்சம் கோடியில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு பொருளாதார திட்டங்களை வெளியிட்டார். தற்போது, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி தரும் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ப.சிதம்பர்ம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ” பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிகளுக்கான…

மேலும்...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (18 மே 2020): தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 536 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். இன்றைய பாதிப்பில் 304 ஆண்களும், 232 பெண்களும் உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 234 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்…

மேலும்...

தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப ரெயில் கட்டணம் செலுத்திய எம்பி ரவீந்திரநாத்துக்கு நன்றி: ஜவாஹிருல்லா!

சென்னை (18 மே 2020): டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாஅத்தினர் ஊர் திரும்ப உதவிய எம்பி ரவீந்திரராத் உள்ளிட்ட அனைவருக்கும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: சுமார் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இன்று டெல்லியில் முழு முடக்கத்தில் பயணிக்க இயலாத நிலையில் இருந்த தமிழக தப்லீக் சகோதரர்களும் சகோதரிகளும் தமிழகம் திரும்பினர். நேற்று இரவு 11 மணியளவில் அவர்கள் தாம்பரம் ரயில்…

மேலும்...

கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக மாறிய மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு பகுதி!

கும்பகோணம் (17 மே 2020): கொரோனா பாதிப்பில்லாத பகுதியாக முழுமையாக மாறியது மேலக்காவேரி கயித்துக்காரத்தெரு பகுதி. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கயித்துக்காரத்தெருவை சேர்ந்த அனைவரும் வீடு திரும்பியதால் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோயால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் 28 நாட்கள் முடிவுற்று, புதிய தொற்றுகள் ஏற்படாமலிருந்தால் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து விடுவிக்கவும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட…

மேலும்...

மதுபான பிரியர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தி!

சென்னை (18 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரம் மாலை 5 மணி வரை இருந்த நிலையில், தற்போது இரவு 7 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கடந்த முறை எழுந்த விமர்சனங்களை தடுக்க டோக்கன் முறை, சமூக இடைவெளி என்று கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி…

மேலும்...

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகள் – பினராயி விஜயன் அதிரடி!

திருவனந்தபுரம் (18 மே 2020): கொரோனா நெருக்‍கடி இடையே தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்‍கு ஓய்வளிக்‍கும் வகையில், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம் ஓய்வெடுத்துக்‍கொள்ளும் திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. கேரளாவில், கொரோனா அச்சுறுத்தலுக்‍கு இடையே பணி செய்யும் போலீசாருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய, 2 குழுக்‍கள் அமைக்‍கப்பட்டன. இந்த குழுக்‍குள், மாநில அரசிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளன. அதன்படி, போலீசார், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம்…

மேலும்...

கொரோனா எங்கிருந்து பரவியது? – விசாரணைக்கு 62 நாடுகள் வலியுறுத்தல்!

ஜெனீவா (18 மே 2020): கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது. கொரோனா பரவலுக்கு சீனாதான் பொறுப்பு என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டிவருகின்றன. வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவானது தொடர்பாக பாகுபாடின்றி, சுதந்திரமாக , விரிவான விசாரணை…

மேலும்...

ஏழை தொழிலாளர்கள் யாக்கூப், அம்ரீத்: இணைபிரியாத நண்பர்களின் சோக சம்பவம்!

போபால் (18 மே 2020): புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், இணைபிரியாத நண்பர்களுமான முஸ்லிம் யாக்கூப் மற்றும் இந்துவான அம்ரீத் இருவருக்கும் இடையேயான இணைபிரியாத நட்பை சுட்டிக்காட்டும் சம்பவம் இது. யாக்கூப் மற்றும் அம்ரீத் இருவரும் குஜராத்தில் பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். ஊரடங்கு காரணமக வேலை இழந்து, இருவரும் சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்தை நோக்கி ஒரு ட்ரக்கில் ரூ 4000 கொடுத்து அதில் இருக்க இடமில்லாமல் நின்று கொண்டே பயணித்தனர். அதில் 50 முதல் 60 பேர்…

மேலும்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் தப்லீக் ஜமாஅத்தினர் -வீடியோ

கந்த்வா (17 மே 2020): மத்திய பிரதேச தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய காத்ரி முஸ்லிம்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுகள் வழங்கி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த திடீர் ஊரடங்கு பல்வேறு மாநிலங்களீல் வசிக்கும் தொழிலாளர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பலர் பசி மற்றும் உணவிண்மை, விபத்து உள்ளிட்டவைகளால் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில்…

மேலும்...

குடியரசுத் தலைவர் மாளிகை மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (17 மே 2020): குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் (ஏசிபி)க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி மாளிகை பணியாளர்கள் உட்பட பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம், ராஷ்டிரபதி பவன் வளாகத்தில், அங்குள்ள ஒரு ஊழியரின் உறவினர் கொரோனா வைரஸ் பாதிக்கபப்ட்டிருந்தது. இதனை அடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 115 வீடுகளில் உள்ளவர்கள் தனினைப் படுத்தப்பட்டனர். எனினும் அதனை தொடர்ந்து யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில்…

மேலும்...