துபாயில் சிக்கித் தவிக்கும் சவூதி வாழ் இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை!

துபாய் (08 பிப் 2021): சவூதி செல்வதற்காக துபாயில் தனிமைப்படுத்தலில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவ மத்திய அரசு மூலமாக கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது கோவிட் தொற்றுநோயால் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் துபாய் வழியாக பலர் சவுதிக்கு சென்றனர். ஆனால் சவூதி அரேபிய மீண்டும் 20 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியா விதித்த விமானத் தடை காரணமாக 14 நாட்கள் துபாயில் தனிமைப்படுத்தலுக்காகக் கழித்த…

மேலும்...

சவூதி அரேபியாவில் பலத்த மழை!

தபூக் (05 பிப் 2021): சவுதி அரேபியாவின் மேற்கு மாகாணமான சில பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. மழையைத் தொடர்ந்து, தபூக்கின் பல்வேறு இடங்களில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. பலத்த மழை காரணமாக அல் ஆலா-மதீனா சாலை மூடப்பட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமை வரை சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு துறை முன்னறிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு மாகாணமான சவுதி அரேபியாவில் தபூக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சருடன் இந்திய தூதுவர் சந்திப்பு – இந்தியாவுடனான விமான போக்குவரத்துத் தடையை விரைவில் நீக்க கோரிக்கை!

ரியாத் (27 ஜன 2021): இந்தியா- சவூதி அரேபியா இடையே விமான போகுவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக விவாதிக்க இந்திய தூதரும் சவுதி சுகாதார அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிட் 19 பரவலை தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள விமான தடை மார்ச் இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட் பரவல் அதிகமாக இருந்ததன் விளைவாக இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில்…

மேலும்...

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதியாகும் கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி (26 ஜன 2021): சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), சவுதி அரேபியாவுக்கு 3 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca) கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா தடுப்புசிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக கொரோனா தடுப்புசிகளை சவூதி அரேபியாவிற்கு ஒருவாரத்தில் ஏற்றுமதி செய்யப்படும்.” என தன் தலைமை நிர்வாகி திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்….

மேலும்...

சவூதி அரேபியாவுக்கு பொறியாளர் வேலைக்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ரியாத் (21 ஜன 2021): வெளிநாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பொறியாளர் பணிக்கு வருவதற்கு முன்பு தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொறியியல் பணிகளின் தரத்தை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள பொறியியலாளர்களும் தகுதித் தேர்வை பல்வேறு கட்டங்களில் முடிப்பார்கள். தற்போது நாட்டில் பணிபுரியும் தகுதிவாய்ந்த வெளிநாட்டு பொறியியலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்முறை தேர்வு கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, புதிய பணி விசாக்களில் வரும்…

மேலும்...

சவூதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி!

ரியாத் (17 ஜன 2021): சவுதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கிறது. இதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வுக்குப் பிறகு வழங்கப்படும். சவுதி அரேபியா உருவாகியுள்ள கோவிட் 19 தடுப்பூசியின், முன் மருத்துவ ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. தொற்று நோயியல் பேராசிரியர் டாக்டர் இமான் அல் மன்சூரின் தலைமையில், இமாம் அப்துல் ரஹ்மான் பின் பைசல் பல்கலைக்கழகம் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்.

மேலும்...

சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் போக்குவரத்து எல்லையை திறக்கிறது!

துபாய் (09 ஜன 2021): சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் நாட்டின் கடல், நிலம் மற்றும் விமான போக்குவரத்து எல்லையை சனிக்கிழமை திறக்கிறது. சவூதி அரேபியாவின் அல் உலாவில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) கூட்டத்தில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. இந்நிலையில் கத்தார் உடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை ஐக்கிய அரபு அமீரகமும் நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த முடிவை…

மேலும்...

சவூதி அரேபியாவில் அனைத்து சரவதேச விமான சேவைகளையும் மார்ச் 31 முதல் மீண்டும்தொடங்க முடிவு!

ரியாத் (08 ஜன 2021): சவூதி அரேபியாவில் உள்ள தற்காலிக பயணத் தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் மார்ச் 31 முதல் தொடங்க முடிவு செய்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2021 முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது: 1. குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். 2. சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை நீக்கப்படும். 3. அனைத்து வான்,…

மேலும்...

சவுதியில் தன்னார்வத்தோடு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இந்தியர்கள்!

ரியாத் (07 ஜன 2021): சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தின் முதல் கட்டத்தில் பல இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மதம் முதல் சவுதியில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் தடுப்பூசியை தன்னார்வத்தோடு பெற்றுக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்முலம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி பலர் தடுப்பூசிக்கு…

மேலும்...

சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேர் கைது!

ரியாத் (09 டிச 2020): சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர். சவூதியின் புதிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி விறகு உள்ளிட்டவை விற்பனை செய்வது குற்றமாகும். இந்நிலையில் குளிர்காலம் தொடங்கியதிலிருந்து விறகுகளுக்கான விற்பனை தீவிரமாக உள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதில் சட்டவிரோதமாக விறகு விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்ற 188 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம்,…

மேலும்...