சவூதியில் இந்தியரை கொலை செய்த சவூதி நாட்டவருக்கு மரண தண்டனை!

ஜித்தா (10 ஜுலை 2021): சவுதியில் இந்தியரை கொலை செய்த, சவூதி நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அமீர் அலி. இவர் சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடம் முன்பு அவரது சக தொழிலாளரான சவூதி நாட்டை சேர்ந்த ஃபுஆத் நூஹ் அப்துல்லாஹ் என்பவரால் படுகொலை செய்யப்படார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களின் சாட்சிகளின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் முதல்…

மேலும்...

கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்திய பெண் மீட்பு!

தோஹா (08 ஜூலை 2021): சவூதி, கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர், சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த எலிசம்மா என்ற பெண் கத்தார் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். கத்தாருக்கு வந்தபின் எலிசம்மா அவரது ஸ்பான்சரால் சவூதி, கத்தார் எல்லையில் உள்ள சல்வா பாலைவனத்தில் ஆடுகள் மேய்க்க பணிக்கப் பட்டுள்ளார். சரியான உணவின்றி, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடந்த இரண்டரை வருடங்களாக இந்த கடும்…

மேலும்...

கோவிட் காலத்தில் சவுதிக்கு செல்ல முயலும் இந்தியர்களை சிக்கலில் சிக்க வைக்கும் முகவர்கள்!

புதுடெல்லி (04 ஜூலை 2021): விமான தடை காரணமாக சவுதிக்கு செல்ல முடியாத இந்தியர்களை பயண முகவர்கள் சிலர் சிக்கலில் சிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவுதி அரேபியா இடையேயான விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப கட்டத்தில், துபாய், மஸ்கட்,பஹ்ரைன் வழியாக சிக்கலின்றி சிலர் சவூதி சென்றனர் . ஆனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் இவற்றின் பாதை மூடப்பட்டது. இதனால் இந்தியர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது….

மேலும்...

சட்டவிரோத பண வசூல் – தொண்டு நிறுவனங்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!

ரியாத் (28 ஜூன் 2021): சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது சவூதி அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சவுதியில் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​அல்லது பணம் திரட்டவோ அனுமதிக்கப் படுவதில்லை. மாறாக, அரசாங்க அலுவலகத்தை அணுகி முறையாக விண்ணப்பித்து அதிகாரப் பூர்வமாக அனுமதி பெற்ற பின்பே பண வசூல் எதுவும் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டதற்காக…

மேலும்...

சவுதியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் போடப்படும் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி!

ரியாத் (24 ஜூன் 2021): சவுதி அரேபியாவில், 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ள நிலையில், இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. சவூதி அரேபியாவில் 587 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இதுவரை , 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளர். இந்த நிலையில் இன்று முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகள் கிடைப்பதைப்…

மேலும்...

சவூதி அரேபியா கோவிட் வரைமுறைப்படி வெளிநாட்டு பயணிகள் – முகீம் பதிவும் நடைமுறையும்!

ரியாத் (18 ஜுன் 2021): சவூதி அரேபியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் முகீம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. கோவிட் 19 நடைமுறைகளின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவிலும் வெளிநாட்டிலும் தடுப்பூசி போடப்பட்ட அல்லது போடாதவர்கள் சவூதி அரேபியாவுக்கு வரும்போது முகீம் பதிவு கட்டாயமாகும். சவூதி அரேபியாவுக்கு புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பதிவு முடிக்கப்பட வேண்டும். விமான நிலையங்கள் மற்றும் பிற எல்லை நுழைவுகளில் நெரிசலைக் குறைக்கவும்…

மேலும்...

இந்தியாவுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் கொள்கலன்களை வழங்கிய சவூதி அரேபியா!

புதுடெல்லி (30 மே 2021): இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க சவூதி அரேபியா இந்தியாவுக்கு தற்போது மீண்டும் உதவிகளை வாரி வழங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக இந்தியா, ஈடு செய்ய முடியாத அளவுக்கு மனித உயிர்களையும், பொருளாதார வீழ்ச்சியினையும் சந்தித்து வருகின்றது. இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் கொரோனா நிவாரண பொருட்களையும் உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் என பலவற்றையும் அனுப்பிய சவுதி…

மேலும்...

இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றவர்களுக்கு சவூதி இந்திய தூதரகத்தின் முக்கிய தகவல்!

ரியாத் (26 மே 2021): சவுதியிலிருந்து விடுமுறையில் சென்ற இந்தியர்கள் இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்குமாறு சவூதி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதர் டாக்டர். அவுசஃப் சயீத் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்கும் நிலை உள்ள நிலையில் அதற்கு பதிலாக பதிவு செய்ய பாஸ்போர்ட் எண்ணை வழங்குவதன் மூலம், சவுதி அரேபியாவுக்கு வருவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்க்கப்படும். என்றார்…

மேலும்...

கொரோனா விவகாரம் – சவூதியில் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்!

ரியாத் (15 மே 2021): சவூதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் COVID-19 தடுப்பூசி போட வேண்டும் அல்லது வாராந்திர பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை சவூதி அதிகாரிகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த நடவடிக்கைகளின்படி, முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்களின் அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், உணவகங்கள், கஃபேக்கள், உணவு விற்பனை நிலையங்களில் உள்ள அனைவரும் கொரோன தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல்…

மேலும்...

2021 ஹஜ் ஏற்பாடுகளை தயாரிக்கும் சவூதி அரேபியா!

ரியாத் (15 பிப் 2021): 2021 ஆண்டுக்கான ஹஜ் முன்னேற்பாடுகளை முன்னெடுத்துள்ளது சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம். சவுதி சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் ஹஜ்ஜிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா நிலைமை நீடிப்பதால், இந்த முறையும் ஹஜ்ஜுக்கு ஒரு சிறப்பு மருத்துவ குழு இருக்கும். இதற்கான நெறிமுறை மற்றும் விதிகளை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு கொரோன பரவல் உச்சத்தில் இருந்ததால் உள் நாட்டினரில் மிகக்குறைந்த அளவினருக்கு மட்டுமே…

மேலும்...