வளைகுடா நாடுகளுடனான உறவு மிக முக்கியமானது: மத்திய அமைச்சர்!

புதுடெல்லி (28 நவ 2020): பொருளாதார மந்த நிலை உள்ள நிலையில் வளைகுடா நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு விரும்புகிறது. இதன் அடிப்படையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு பல்வேறு துறைகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைகள் வளைகுடாவுடனான உறவை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. . தற்போதைய பொருளாதார மந்தநிலை ஒரு பெரிய…

மேலும்...

நவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்!

ஜித்தா (20அக் 2020): சவூதி அரேபியாவில் நவம்பர் 15 முதல் குளிர்கால கொண்டாட்டத்திற்கு சவுதி சுற்றுலா ஆணையம் தயாராகி வருகிறது. சவுதியின் 18 இடங்களில் நடத்தப்படும் இந்த குளிர்கால கொண்டாட்டம் நவம்பர் 15 முதல் 2021 ஏப்ரல் 30 வரை பெரிய அளவில் நடைபெறும் என கூறப்படுகிறது. சவூதி கோடைகால கொண்டாட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கா, மதீனா, ஜெட்டா, ரியாத், தைஃப், அல்-கோபர், அல்-அஹ்ஸா, தம்மம், அபா, ஜசான், அல்-பஹா அலுலா,…

மேலும்...

சவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்!

ஜித்தா (18 ஆக 2020): இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் சவூதி அரேபியாவில் நடத்திவரும் தேசிய பிளாஸ்மா(Plasma) தானம் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக சவூதி அரேபியா மேற்குமாகாணம் ஜித்தாவில் 74 வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் ஜித்தா மாநகரில் பிளாஸ்மா தான பிரச்சாரத்தை தொடங்கியது. இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம், ஜித்தா மாநகரில் பிளாஸ்மா தான பிரச்சாரத்தை 15.8.2020 சனிக்கிழமை காலை முதல் தொடங்கியது. இதனை இந்திய துணைத்தூதரக செயல் துணைத்தூதர் ஒய்.எஸ்….

மேலும்...

சவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்!

ரியாத் (14 ஜூலை 2020): சவூதில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். உலகை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் சவூதிஅரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் சமீப காலமாக சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. அந்த வகையில் இதுவரையிலான அதிகபட்சமாக இன்று (14 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை) 7,718 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2692…

மேலும்...

ஜூன் 21 ஆம் தேதி முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் சவூதி அரேபியா!

ரியாத் (20 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சவூதி அரேபியா இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜுன் 21 2020 முதல் அனைத்து பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் இயங்கும். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல் அவசியமாகும். வெளிநாட்டு விமான…

மேலும்...

சவூதியிலிருந்து 152 பயணிகளுடன் முதல் விமானம் இந்தியா புறப்பட்டது!

ரியாத் (08 மே 2020): சவூதி அரேபியாவிலிருந்து 152 பயணிகளை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு புறப்பட்டது. கொரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் இந்தியா புறப்பட்டது. நேற்று மாலை இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 354 பயணிகளுடன் கேரள மாநிலம் கொச்சி சென்றடைந்தது. இந்நிலையில்…

மேலும்...

சவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்!

ரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு இதுவரை கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) அல் அரபியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் 8 பேர் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலானோர் பல்வேறு நாடுகளிலிருந்தும் சமீபத்தில் பயணம் மேற்கொண்டவர்கள். இதற்கிடையே சமூக…

மேலும்...

சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு!

ரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது….

மேலும்...

சவூதியில் திருமண மண்டபம், ஓட்டல்கள், அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை!

ரியாத் (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதியில் திருமண மண்டபம், ஓட்டல்கள், அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, மற்றும் வளைகுடா நாடான ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் கொரோனா வைரஸால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், சவூதி அரேபியாவில்…

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை!

ரியாத் (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதி அரேபிய இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் 21 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே உம்ரா, மற்றும் சுற்றுலா விசாவில்…

மேலும்...