ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு அதிர்ச்சி கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளனர். தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் கிட்டதட்ட அனைத்து துறைசார்ந்த நபர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 2894 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): இந்தியாவில், நேற்று ஒரே நாளில், 2894 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,808 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, வரும் 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக,…

மேலும்...

கொரோனா விவகாரம் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்!

நியூயார்க் (10 மே 2020): கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் செயல்பாடு குறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொறுப்பற்ற நிர்வாகமே இதற்கு காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், தான் அதிபராக இருந்தபோது பணியாற்றிய வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், கொரோனாவை கையாளும் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் செயல்பாடு…

மேலும்...

டாஸ்மாக் விவகாரம் – நடிகர் ரஜினிகாந்த அதிர்ச்சி கருத்து!

சென்னை (10 மே 2020): டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முற்பட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டியதுதான் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிற்கு…

மேலும்...

மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக உதவ முன் வந்த மசூதி நிர்வாகம்!

கொல்கத்தா (10 மே 2020): மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக பயன்படுத்திக் கொள்ள மசூதி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மசூதி நிர்வாகம், கொல்கத்தா பெங்காலி பஜார் மசூதியின் மூன்றாவது தளத்தை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என…

மேலும்...

ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரமலான் உணவு மற்றும் கொரோனா பேரிடர் உதவி!

தஞ்சாவூர் (10 மே 2020): தமிழகத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வாடும் மக்களுக்கு ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரூ 18 லட்சம் மதிப்பிலான கொரோனா பேரிடர் மற்ரும் ரமலான் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். சவூதி அரேபியா ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றம் தாயகத்தின் தன்னார்வல தொண்டு நிறுவனங்களான தஞ்சை அனைத்து லயன்ஸ் சங்கங்கள், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், அமீரகத் தமிழர்கள் மறுமலர்ச்சிப் பேரவை – அமீரகம், ஏ.எம்.சி…

மேலும்...

நான் நலமுடன் உள்ளேன் – வதந்திகளுக்கு அமித் ஷா முற்றுபுள்ளி!

புதுடெல்லி (09 மே 2020): தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பல்வேறு அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் அமித் ஷா சோர்வாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான புகைப்படங்களைக் கொண்டு, அமித் ஷா எதிர்ப்பாளர்கள் அவருக்கு நோய் ஏற்பட்டு விட்டதாக உறுதி செய்யப்படாத…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் தலைவர் பேசியதாக வைரலான ஆடியோ போலியானது: விசாரணையில் தகவல்!

புதுடெல்லி (09 மே 2020): கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்பதாக டெல்லி தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என விசாரணை முடிவு வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு டெல்லியில் கூடிய தப்லீக் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் பின்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் கலைக்கப்பட்டது. எனினும் கொரோனாவை தப்லீக் ஜமாஅத்தினர்தான் பரப்பினர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பரப்பின. மேலும் சமூக ஊடகங்களிலும் போலியான…

மேலும்...

இது சாதாரண வெற்றியல்ல – கமல்ஹாசன் பெருமிதம்!

சென்னை (09 மே 2020): டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சாதாரண வெற்றியல்ல . தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின்…

மேலும்...

இந்தியாவில் 60 ஆயிரத்தை எட்டும் கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 1981 ஆக உயர்வு!

புதுடெல்லி (09 மே 2020): இந்தியாவில் கொரோனாவால் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1981 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்கிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று…

மேலும்...