பிரபல நடிகர் மீது 4 வழக்குகள் – பரபரப்பை கிளப்பிவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்த நடிகை!

சென்னை (05 அக் 2020): நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தர்ஷன் மீது 4 வழக்குகளை கொடுத்துவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. தமிழ் பட நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டதாக சனம் கூறியுள்ளார். ஆனால் தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக கூறி மறுத்துவிட்டதாக கடந்த வருடம் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் நேற்று தொடங்கிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும்…

மேலும்...

கமல் படத்தில் சிம்பு – மாநாடு என்ன ஆச்சு?

சென்னை (01 அக் 2020): கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவன தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடையூறுகளுக்கு இடையே மாநாடு படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். மீண்டும் படப்பிடிப்புகளை துவங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அண்மையில் அனுமதி அளித்தன. ஆனால் மாநாடு படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு…

மேலும்...

சிறையில் பிரபல நடிகைகள் கதறல்

பெங்களூரு (29 செப் 2020): போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகள் ஜாமீன் கிடைக்காததால் கதறி அழுதுள்ளனர். கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக கைதாகும் நபர்களை, சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான அறைகளில் தங்க வைப்பதே வழக்கம். அங்கு 14 நாட்கள் தனிமை முடிந்த பின்பு தான் மற்ற…

மேலும்...

ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை வீண் – எஸ்பி.பால சுப்ரமணியன் மறைந்தார்!

சென்னை (25 செப் 2020): ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் மறைந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்!

சென்னை (17 செப் 2020): நடிகர் விஜய் படத்தை இயக்கிய இயக்குநர் பாபு சிவன் (55) இன்று காலமானார். விஜய்-அனுஷ்கா நடித்த ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாபு சிவன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற நாடகத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தரணி இயக்கிய ‘குருவி’, பரதன் இயக்கிய பைரவா படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் இருந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

மேலும்...

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை பின்னணி: சிக்குகிறாரா, பிரபல தமிழ் நடிகை!

மும்பை (12 செப் 2020): இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலையின் பின்னணியில் கைதாகி உள்ள நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். முதலில் இதை தற்கொலை வழக்காக எடுத்து மும்பை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு…

மேலும்...

விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்!

சென்னை (10 செப் 2020): விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 45. நடிகர் வடிவேலு போன்றே தோற்றம் கொண்ட வடிவேலு பாலாஜிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரையும், டிவி நடிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வடிவேல் பாலாஜிக்கு, மனைவி, ஒரு…

மேலும்...

கொரோனா நெகட்டிவ் எனினும் எஸ்பிபிக்கு இந்நிலையா?

சென்னை (08 செப் 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா சோதனை நெகட்டிவ் என்றபோதிலும் நுரையீரல் முன்னேற்றம அடையவில்லை. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவரது மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது தந்தைக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்…

மேலும்...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு நடிகை கைது!

பெங்களூரு (08 செப் 2020): போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகிணி திவேதி கைதான நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணியும் கைதாகியுள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரைப்பட பிரபலங்களுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில்…

மேலும்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யூவில் கொண்டாட்டம்!

சென்னை (07 செப் 2020): பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் அவரது மனைவியுடன் ஐ.சி.யூ.வில் திருமண நாளை கொண்டாடியுள்ளார். எஸ்பிபி கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ,உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. – சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக்…

மேலும்...