கொரோனாவிலிருந்து மீண்டது எப்படி?? – நடிகர் விஷால் பரபரப்பு தகவல் :வீடியோ!

சென்னை (26 ஜூலை 2020): கொரோனா வைரஸிலிருந்து மீண்டது குறித்து நடிகர் விஷால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கியுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் அவரும், அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையும், அதிலிருந்து எப்படி மீண்டார்? என்பது குறித்தும் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”எனது தந்தைக்கு 83 வயதாகிறது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என வந்தது. எனினும் அவரை…

மேலும்...

பாலிவுட் பிரபலங்கள் மீது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகீர் குற்றச்சாட்டு!

சென்னை (25 ஜூலை 2020): “நான் இந்தி திரைப்படங்களில் பணிபுரிவதை தடுக்க ஒரு கூட்டமே செயல்படுகிறது” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குற்றச்சாட்டு வைத்துள்ளார். வானொலி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் என்னிடம் செல்ல வேண்டாம் தடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பல தடைகள் தனக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதற்கு…

மேலும்...

கந்தசஷ்டி கவசம் – நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட்!

சென்னை (22 ஜூலை 2020): கந்தசஷ்டி கவசம் மற்றும் கறுப்பர் கூட்டம் யூடுப் சேனல் குறித்து நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட் வெளியிட்டுள்ளார். எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என ட்விட்டரில் திடீர் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், கருப்பர் கூட்டத்தின் வீடியோவை டெலிட் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் கடவுளான முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சையாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப்…

மேலும்...

பிரபல திரைப்பட இயக்குநர் மரணம்!

மும்பை (21 ஜூலை 2020): பிரபல பாலிவுட் இயக்குநர் ரஜத் முகர்ஜி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ரஜத் முகர்ஜிக்கு சில மாதங்களாக உடல் நல பாதிப்பு இருந்தது. சிறுநீரக பிரச்சினையாலும் அவதிப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்….

மேலும்...
ARR 1

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானு-க்கு நோட்டீஸ்!

சென்னை (19 ஜூலை,2020):கடல்புறா படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் பாபு கணேஷ். தொடர்ந்து இரவு பாடகன், தீர்ப்புகள் மாற்றப்படும் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், திரையரங்குகளில் முதல்முறையாக திரைப்பட காட்சியுடன் இணைந்த வாசனையை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கான்செப்டை பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் பாபு கணேஷ். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் தமிழ் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளாகின்றன. கடந்த 2000-ம் ஆண்டில் நாகலிங்கம் என்ற திரைப்படத்தை சாம்பிராணி வாசனையுடன்…

மேலும்...
Ajithkumar 1

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை (18ஜூலை,2020):தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அஜித்குமார். இவருக்கென்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு! அவருடைய வீடு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. யாரோ ஒரு மர்ம நபர் இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டுக்கு விரைந்து சென்று வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்….

மேலும்...
Aishwarya-Aaradhya

ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (17 ஜூலை,2020): முன்னாள் உலக அழகியும், நடிகர் அமிதாப்பச்சன் மருமகளுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே, அவருடைய கணவருக்கும், மாமனாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், ஐஸ்வர்யா ராயும் அவரது மகளான ஆராத்யா பச்சனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நடிகர் அமிதாப் பச்சன்…

மேலும்...

திரையுலகினரை குறி வைத்து தாக்கும் கொரோனா -அதிர்ச்சியில் நடிகர் அர்ஜுன்!

பெங்களூரு (16 ஜூலை 2020): அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதுகுறித்து துர்வா சார்ஜாவே ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ”எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர்…

மேலும்...

அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு கொரோனவை பரப்பியது இவர்தானாம்!

மும்பை (13 ஜூலை 2020): நடிகர் அமித்தாப் பச்சன் குடும்பத்துக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்ற கேள்வியே தற்போது மேலோங்கி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், மற்றும் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்நிலையில் இந்நிலையில் வீட்டுக்குள் அடங்கி கிடந்த அமிதாபுக்கு யார்மூலம் கொரோனா பரவியிருக்கக் கூடும் என்றதில், நடிகர் அபிஷேக் பச்சன் மூலமாகதான் அமிதாப்…

மேலும்...

பதைபதைக்கும் பாலிவுட் – அமிதாபை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று!

மும்பை (12 ஜூலை 2020): இந்தி நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அமிதாப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவரே ட்விட்டரில் கூறி உள்ளார். இந்நிலையில் அமிதாபின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அபிஷேக் பச்சனும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

மேலும்...