2021 ஹஜ் ஏற்பாடுகளை தயாரிக்கும் சவூதி அரேபியா!

ரியாத் (15 பிப் 2021): 2021 ஆண்டுக்கான ஹஜ் முன்னேற்பாடுகளை முன்னெடுத்துள்ளது சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம். சவுதி சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் ஹஜ்ஜிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா நிலைமை நீடிப்பதால், இந்த முறையும் ஹஜ்ஜுக்கு ஒரு சிறப்பு மருத்துவ குழு இருக்கும். இதற்கான நெறிமுறை மற்றும் விதிகளை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு கொரோன பரவல் உச்சத்தில் இருந்ததால் உள் நாட்டினரில் மிகக்குறைந்த அளவினருக்கு மட்டுமே…

மேலும்...

துபாயில் சிக்கித் தவிக்கும் சவூதி வாழ் இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை!

துபாய் (08 பிப் 2021): சவூதி செல்வதற்காக துபாயில் தனிமைப்படுத்தலில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவ மத்திய அரசு மூலமாக கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது கோவிட் தொற்றுநோயால் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேரடி விமானம் இல்லாததால் துபாய் வழியாக பலர் சவுதிக்கு சென்றனர். ஆனால் சவூதி அரேபிய மீண்டும் 20 நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் சவூதி அரேபியா விதித்த விமானத் தடை காரணமாக 14 நாட்கள் துபாயில் தனிமைப்படுத்தலுக்காகக் கழித்த…

மேலும்...

சவூதி அரேபியாவில் பலத்த மழை!

தபூக் (05 பிப் 2021): சவுதி அரேபியாவின் மேற்கு மாகாணமான சில பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. மழையைத் தொடர்ந்து, தபூக்கின் பல்வேறு இடங்களில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. பலத்த மழை காரணமாக அல் ஆலா-மதீனா சாலை மூடப்பட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமை வரை சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு துறை முன்னறிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு மாகாணமான சவுதி அரேபியாவில் தபூக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த…

மேலும்...

சவூதியில் அனைத்து பொழுது போக்கு நிகழ்வுகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் மூடல்!

ரியாத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அடுத்த 10 நாட்களுக்கு சவூதி அரேபியாவில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் மற்றும் உணவகங்களையும் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, வியாழக்கிழமை (பிப் .4), இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் உலகின் சில நாடுகளைத் தாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையை…

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தற்காலிக தடை!

ரியாத் (02 பிப் 2021): சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நகர்வாக இந்தியா உள்ளிட்ட, 20 குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவிற்கு நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி பத்திரிகை நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டி சவுதி கெசட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சவுதிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் விவரம்: அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சருடன் இந்திய தூதுவர் சந்திப்பு – இந்தியாவுடனான விமான போக்குவரத்துத் தடையை விரைவில் நீக்க கோரிக்கை!

ரியாத் (27 ஜன 2021): இந்தியா- சவூதி அரேபியா இடையே விமான போகுவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக விவாதிக்க இந்திய தூதரும் சவுதி சுகாதார அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிட் 19 பரவலை தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள விமான தடை மார்ச் இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட் பரவல் அதிகமாக இருந்ததன் விளைவாக இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில்…

மேலும்...

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதியாகும் கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி (26 ஜன 2021): சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), சவுதி அரேபியாவுக்கு 3 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca) கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா தடுப்புசிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக கொரோனா தடுப்புசிகளை சவூதி அரேபியாவிற்கு ஒருவாரத்தில் ஏற்றுமதி செய்யப்படும்.” என தன் தலைமை நிர்வாகி திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்….

மேலும்...

சவூதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி!

ரியாத் (17 ஜன 2021): சவுதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கிறது. இதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வுக்குப் பிறகு வழங்கப்படும். சவுதி அரேபியா உருவாகியுள்ள கோவிட் 19 தடுப்பூசியின், முன் மருத்துவ ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. தொற்று நோயியல் பேராசிரியர் டாக்டர் இமான் அல் மன்சூரின் தலைமையில், இமாம் அப்துல் ரஹ்மான் பின் பைசல் பல்கலைக்கழகம் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்.

மேலும்...

சவூதி அரேபியாவில் அனைத்து சரவதேச விமான சேவைகளையும் மார்ச் 31 முதல் மீண்டும்தொடங்க முடிவு!

ரியாத் (08 ஜன 2021): சவூதி அரேபியாவில் உள்ள தற்காலிக பயணத் தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் மார்ச் 31 முதல் தொடங்க முடிவு செய்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2021 முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது: 1. குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். 2. சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை நீக்கப்படும். 3. அனைத்து வான்,…

மேலும்...

சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போட பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ரியாத் (06 ஜன 2020): சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. கோவிட் 19 பரவலை தடுக்க பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சவூதி அரேபியாவில் கடந்த மாதம் முதல் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள் நாட்டு வெளி நாட்டினர் அனைவரும் செஹாத்தி அப்ளிகேஷன் பயன்பாட்டின் மூலம் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய…

மேலும்...