சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை!

ரியாத் (03 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் சவுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. கோவிட்டின் மரபணு மாற்றப்பட்ட புதிய வகை வைரஸ்கள் பரவலை அடுத்து, இந்த அறிவிப்பை சவூதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை (ஜூலை 4, 2021) இரவு 11 மணி முதல் நடைமுறைக்கு வரும்….

மேலும்...

சட்டவிரோத பண வசூல் – தொண்டு நிறுவனங்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!

ரியாத் (28 ஜூன் 2021): சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் மீது சவூதி அரசு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சவுதியில் தொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ​​அல்லது பணம் திரட்டவோ அனுமதிக்கப் படுவதில்லை. மாறாக, அரசாங்க அலுவலகத்தை அணுகி முறையாக விண்ணப்பித்து அதிகாரப் பூர்வமாக அனுமதி பெற்ற பின்பே பண வசூல் எதுவும் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபட்டதற்காக…

மேலும்...

டிஜிட்டல் வங்கியாக செயல்படும் சவூதி எஸ்.டி.சி பே!

ரியாத் (23 ஜூன் 2021): எஸ்.டி.சி பே இப்போது சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டவர்களிடையே பிரபலமாக உள்ளது. சவூதி அரேபியாவின் பிரபலமான ஆன்லைன் வால்லட் எஸ்.டி.சி பே இப்போது டிஜிட்டல் வங்கியாக செயல்படும். இதற்கு சவுதி மத்திய வங்கி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் நிறுவனம் இந்தத் துறைக்கு அதிக மூலதனத்தைக் கொண்டு வரும் என்றும், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும்...

சவூதி அரேபியா கோவிட் வரைமுறைப்படி வெளிநாட்டு பயணிகள் – முகீம் பதிவும் நடைமுறையும்!

ரியாத் (18 ஜுன் 2021): சவூதி அரேபியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் முகீம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. கோவிட் 19 நடைமுறைகளின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவிலும் வெளிநாட்டிலும் தடுப்பூசி போடப்பட்ட அல்லது போடாதவர்கள் சவூதி அரேபியாவுக்கு வரும்போது முகீம் பதிவு கட்டாயமாகும். சவூதி அரேபியாவுக்கு புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் பதிவு முடிக்கப்பட வேண்டும். விமான நிலையங்கள் மற்றும் பிற எல்லை நுழைவுகளில் நெரிசலைக் குறைக்கவும்…

மேலும்...

இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி போடுபவர்களுக்கு சவூதி வர அனுமதி!

ரியாத் (07 ஜூன் 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடுபவர்கள் சவுதி வரும்போது தனிமைப்படுத்தல் விலக்கு அளிக்க சவூதி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சவூதி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் விநியோகிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போன்றது. தடுப்பூசி போடுவதற்காக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் முகீம் போர்ட்டலில் தடுப்பூசி குறித்த தகவல்களை வழங்க வேண்டும்….

மேலும்...

இந்தியா சவூதி அரேபியா விமானபோக்குவரத்தை தொடங்க மீண்டும் பேச்சுவார்த்தை!

ரியாத் (03 ஜூன் 2021): இந்தியா சவுதி அரேபியாவுக்கு இடையேயான விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் அவுசாஃப் சயீத் மற்றும் சவூதி சிவில் ஏவியேஷன் தலைவர் இருவருக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா சவுதி அரேபியாவுக்கு இடையேயான விமான போக்குவரத்து ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வழக்குகளின் எண்ணிக்கை குறைவதால் பயணம் மீண்டும் தொடங்கும் என்று…

மேலும்...

இந்தியாவுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் கொள்கலன்களை வழங்கிய சவூதி அரேபியா!

புதுடெல்லி (30 மே 2021): இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க சவூதி அரேபியா இந்தியாவுக்கு தற்போது மீண்டும் உதவிகளை வாரி வழங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக இந்தியா, ஈடு செய்ய முடியாத அளவுக்கு மனித உயிர்களையும், பொருளாதார வீழ்ச்சியினையும் சந்தித்து வருகின்றது. இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் கொரோனா நிவாரண பொருட்களையும் உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் என பலவற்றையும் அனுப்பிய சவுதி…

மேலும்...

இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றவர்களுக்கு சவூதி இந்திய தூதரகத்தின் முக்கிய தகவல்!

ரியாத் (26 மே 2021): சவுதியிலிருந்து விடுமுறையில் சென்ற இந்தியர்கள் இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்குமாறு சவூதி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதர் டாக்டர். அவுசஃப் சயீத் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்கும் நிலை உள்ள நிலையில் அதற்கு பதிலாக பதிவு செய்ய பாஸ்போர்ட் எண்ணை வழங்குவதன் மூலம், சவுதி அரேபியாவுக்கு வருவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்க்கப்படும். என்றார்…

மேலும்...

கொரோனா விவகாரம் – சவூதியில் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்!

ரியாத் (15 மே 2021): சவூதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் COVID-19 தடுப்பூசி போட வேண்டும் அல்லது வாராந்திர பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவை சவூதி அதிகாரிகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் அறிமுகப்படுத்திய இந்த நடவடிக்கைகளின்படி, முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்களின் அழகு நிலையங்களில் பணிபுரிபவர்கள், உணவகங்கள், கஃபேக்கள், உணவு விற்பனை நிலையங்களில் உள்ள அனைவரும் கொரோன தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல்…

மேலும்...

கோவிட் தன்னார்வப் பணியாளர்களுக்கு கவுரவம் – நினைவு மலர் வெளியீட்டு விழா!

ரியாத் (03 ஏப் 2021): சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டு கோவிட்-19 நோய் தொற்று காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்காகவும், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்காகவும் தொண்டாற்றிய எண்ணற்ற சமூக பணி ஊழியர்கள், அரசு பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவரையும் கெளரவிக்கும் வகையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம், சவுதி அரேபியா சார்பாக “The Distance” நூல் வெளியீட்டு விழா கடந்த 28 மார்ச் 2021 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய தூதரகத்தின்…

மேலும்...