முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரும் துபாய் மீடியா!

துபாய் (08 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக நாளிதழ் கோரிக்கை வைத்துள்ளது. கல்ஃப் நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன் அன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க…

மேலும்...

மது கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி (08 மே 2020) மது விற்பனையை மது கடைகளில் விற்காமல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள் சுமார் 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில மதுபானக் கடைகளிலும் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுவிற்பனையை தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல…

மேலும்...

சென்னையில் முக்கிய நபர்களை தாக்கும் கொரோனா – தொடர் அதிர்ச்சி!

சென்னை (08 மே 2020): சென்னையில் முதன்மை பணியாளர்களை கொரோனா தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி வரும் முதன்மை பணியாளர்களான டாக்டர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் உருவான பரபரப்பு அடங்குவதற்குள், மின் வாரியத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழக மின்வாரியத்துறை இஞ்ஜினியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த…

மேலும்...

டாஸ்மாக் கொடுமை – முதல்வர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலம் (08 மே 2020): சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் டோக்கன் பள்ளியில் வைத்து வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுவரை அமலில் இருக்கும் நிலையில், நேற்று முதல் சாராய வியாபாரம், டாஸ்மாக் அமோகமாக நடைபெற்று வருகிறது. மது பிரியர்கள் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குடிகாரர்களுக்கு,…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!

கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும். மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க…

மேலும்...

மதுபானம் வீட்டுக்கே சென்று டெலிவரி – சட்டம் அமல்!

சண்டீகர் (07 மே 2020): பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்‍கே சென்று மதுபானம் வழங்கும் திட்டம் அமலுக்‍கு வந்தது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மது கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் எந்தெந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மது விநியோகம் செய்யலாம் என்பது குறித்து அப்பகுதி கலால் துறை ஆணையர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளது. நபர் ஒருவருக்‍கு அதிகபட்சம் நாள் ஒன்றுக்‍கு…

மேலும்...

குடிகாரர்களின் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு திண்டாட்டம்!

சென்னை (07 மே 2020): என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்தபடியே டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே விபத்துக்களும் நடக்க தொடங்கியுள்ளன. பலவித எதிர்ப்புகள் வந்தாலும் அரசு உறுதியாக இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகளை இன்று திறந்தது. ஆனால் எங்கும் சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பயந்தபடியே வன்முறைகளும், விபத்துக்களும் நடக்க ஆரம்பித்துள்ளன.. மதுரை அலங்கநல்லூரில் கணவன் குடித்துவிட்டு வந்தார் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த மனைவியும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டனர்.. இப்போது…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்‍குநாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரேநாளில் 580 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்‍கை 5 ஆயிரத்து 409ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 316 பேருக்‍கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னையில் பாதிக்‍கப் பட்டவர்களின் மொத்த…

மேலும்...

சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத் மூத்த தலைவர் மரணம்!

ஜான்பூர் (07 மே 2020): கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உத்திர பிரதேச தப்லீக் ஜமாஅத் மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் பரவல் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்த வேலையில் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர்தான் கொரோனாவை பரப்பியதாக ஊடகங்கள் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது. அதேவேளை தப்லீக் ஜமாத்தினர் சிலருக்கு கொரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டது….

மேலும்...

பேருந்துகள் இயக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்!

சென்னை (07 மே 2020): ஊரடங்கு முடிவடைந்த பின்னர், 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மே 17-க்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்படும் போது, ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முகக் கவசம், கையுறை மற்றும் hand sanitizer வழங்கப்படும் என்றும், பேருந்தை இயக்குவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இடைவெளி விட்டு அமருவதற்கு ஏற்ப, இருக்கைகளில் மார்க் செய்ய வேண்டும் என்றும், பேருந்தில் நின்று கொண்டே…

மேலும்...