டெல்லியை மிஞ்சிய தமிழகம் – கொரோனா பாதிப்பில் மூன்றாமிடம்!

சென்னை (11 மே 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, 7 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. நேற்று புதியதாக 669 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. புதியதாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 47 பேர் தமிழகத்தில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இன்று மட்டும் 135 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,959 பேர் கொரோனா தொற்றிலிருந்து…

மேலும்...

தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய டாக்டர் ஜாஹித்!

புதுடெல்லி (10 மே 2020): நோன்பு திறக்கும் நேரம் நெருங்கிவிட்டது. டாக்டர் ஜாஹித் நோன்பு திறப்பதற்காக அமர்ந்து பிரார்த்தனையில் இருந்தார். அப்போது அவருக்கு அவசர அழைப்பு வந்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் ஜாஹித். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளியை ஆம்புலன்சிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற வேண்டும். அதற்கு டாக்டர் ஜாஹிதின் உதவி தேவை. அதற்கான அழைப்புதான் அப்போது ஜாஹிதுக்கு வந்திருந்தது. உடனே…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் இந்திய மருத்துவர் மரணம்!

குவைத் (10 மே 2020): குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மருத்துவர் மரணம் அடைந்துள்ளார். பல் மருத்துவரான வாசுதேவ ராவ் (54) கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் உயிரிழந்துள்ளார். இவர் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். குவைத்தில் ஏற்கனவே எகிப்தை சேர்ந்த தாரிக் ஹுசைன் என்ற மருத்துவர் உயிரிழந்த நிலையில் தற்போது குவைத்தில் கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது மருத்துவர் வாசுதேவ ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. Source: Gulf News

மேலும்...

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு – எந்தெந்த கடைகள் செயல்படலாம்? – முழு விளக்கம்!

சென்னை (10 மே 2020): கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை முதல் 34 வகையான கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு திறக்க அனுமதித்த கடைகளின் விவரம் வருமாறு: டீக்கடைகள் (பார்சல் மட்டும்) பேக்கரிகள் (பார்சல் மட்டும்) உணவகங்கள் (பார்சல் மட்டும்) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்குக் கடைகள் கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள் சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள் மின்…

மேலும்...

சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (10 மே 2020): சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,204 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

மேலும்...

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – நாளை பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை!

புதுடெல்லி (10 மே 2020): நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 17-ம் தேதியுடன் முடியும் நிலையில் பிரதமர் மோடி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 5-வது முறையாக நடைபெற உள்ளது. ஏற்கனவே 3-வது ஊரடங்கு அமலில் இருக்கும் இருக்கும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள…

மேலும்...

ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு அதிர்ச்சி கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளனர். தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் கிட்டதட்ட அனைத்து துறைசார்ந்த நபர்களையும் கொரோனா தாக்கியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 2894 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): இந்தியாவில், நேற்று ஒரே நாளில், 2894 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,808 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, வரும் 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக,…

மேலும்...

கொரோனா விவகாரம் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்!

நியூயார்க் (10 மே 2020): கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் செயல்பாடு குறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொறுப்பற்ற நிர்வாகமே இதற்கு காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், தான் அதிபராக இருந்தபோது பணியாற்றிய வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், கொரோனாவை கையாளும் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் செயல்பாடு…

மேலும்...

டாஸ்மாக் விவகாரம் – நடிகர் ரஜினிகாந்த அதிர்ச்சி கருத்து!

சென்னை (10 மே 2020): டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முற்பட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டியதுதான் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிற்கு…

மேலும்...