கேரளாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு தளர்வு!

திருவனந்தபுரம் (23 மே 2020): ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வகையில் சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதேபோல ரம்ஜான் பண்டிகை தினமான ஞாயிற்றுக் கிழமை மட்டும்…

மேலும்...

வாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி பயணம் சென்ற இளைஞர் கைது!

விஜயவாடா (23 மே 2020): ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊருக்கு செல்ல வாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி அதில் பயணம் செய்த இளைஞரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து ஆந்திர மாநிலம் அனந்தப்புரத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்தத இளைஞர் ஊரடங்கு காரணமாக ஊருக்கு திரும்ப செல்ல முடியாமல் இருந்துள்ளார். அதனால் அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்த அவர் அதன் பின்னர் பனிமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுத்து அதில் பெங்களூரு செல்ல…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு!

வாஷிங்டன் (23 மே 2020): அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதன்  பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. அதேவேளை அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவில் தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகளை உடனடியாக…

மேலும்...

புத்தாடை இல்லா ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் முடிவு!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணியாமல் இவ்வருட ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக அளவிலான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு ம் தெலுங்கானா மாநிலத்தில் இவ்வருடம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். எனினும்…

மேலும்...

மருத்துவர்களின் அறிவுரையை மீறும் டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் (22 மே 2020): கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை தொடர்ந்து அவர் மறுத்து வருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பிரச்சாரங்களில் பங்கேற்று வரும் ட்ரம்ப், தொடக்கத்திலிருந்தே கை குலுக்குவது போன்ற செயல்களில் மருத்துவர்களின் அறிவுரைகளை மீறி செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், மிச்சிகனில் செயல்படும் ஃபோர்ட் நிறுவனத்தில் முகக்கசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பதிசெய்யப்படும் தொழிற்சாலைகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், முகக்கசம்…

மேலும்...

கொஞ்சம் நிறுத்தி வைங்க – பிரதமருக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (22 மே 2020): விமான சேவையை இப்போதைக்கு தொடங்க வேண்டாம் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதன்படி, வரும் 25 ஆம் தேதி முதல் நாடு…

மேலும்...

நெஞ்சை பிழியும் சம்பவம்: பசி பட்டினி – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் , நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. இவர்களில் தினக்கூலிகள் கையில் உணவு,பணம் எதுவும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வரங்கல் புறநகர் கிணற்றில் மொத்தம் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களின் உடம்பில்…

மேலும்...

தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓட அனுமதி!

சென்னை (22 மே 2020): தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற இடங்களில் நிபந்தனையுடன் ஆட்டோக்‍களை இயக்‍க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக, கடந்த 2 மாதங்களுக்‍கும் மேலாக தமிழகத்தில் பிற வாகனங்களுடன் ஆட்டோக்‍களுக்‍கும் தடை விதிக்‍கப்பட்டது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். எனவே, அவர்களது நிலையைக்‍ கருத்தில் கொண்டு, ஆட்டோக்‍களை இயக்‍க அனுமதி அளிக்‍க வேண்டுமென, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்….

மேலும்...

தொடங்கும் விமான போக்குவரத்து – மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் அஸ்ஸாம் மாநில பாஜக அரசு!

புதுடெல்லி (22 மே 2020): உள்ளூர் விமான போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில் அஸ்ஸாம் வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அஸ்ஸாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கிக் கிடக்கும் விமான சேவையானது, வரும் மே 25 முதல் மீண்டும் தொடங்க உள்ளது. ஆனால் அ “சிறிய நேரம் கொண்ட பயணங்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இருக்காது. இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். உள்ளூர் விமானங்கள் மூலம் வருபவர்களை 14…

மேலும்...

அதிர்ச்சி – கொரோனா வார்டுகளில் பணிபுரியும் 300 நர்ஸ்கள் (செவிலியர்) ராஜினாமா!

கொல்கத்தா (21 மே 2020): கொல்கத்தாவில் இனப்பாகுபாடு காட்டுவதாகக் கூறி 300 செவியிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1000 -த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர். இதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில்…

மேலும்...