அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக!

சென்னை (09 மார்ச் 2021): அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்...

அமித்ஷாவின் அதிரடி திட்டம் – அப்செட்டில் எடப்பாடி!

சென்னை (02 மார்ச் 2021): அதிமுகவுடன் சசிகலா இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாகவும் இதனால் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பாஜகவுக்கு 22 அல்லது…

மேலும்...

சசிகலாவுடன் இணையும் முக்கிய அரசியல் பிரபலங்கள் – கலக்கத்தில் எடப்பாடி!

சென்னை (24 பிப் 2021): வி.கே சசிகலாவை முக்கிய அரசியல் பிரபலங்கள் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்தார். அதேபோல், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமும், கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் சூடுப்பிடித்துள்ள நிலையில், சசிகலாவை சரத்குமார், சீமான் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்திருப்பது முக்கியத்துவம்…

மேலும்...

திமுகவை வீழ்த்த எடப்பாடியுடன் கைகோர்க்க சசிகலா திட்டம்!

சென்னை (09 பிப் 2021): எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எதிரி அல்ல திமுகவே எதிரி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கட்சியின் பொதுச்செயலாளரை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள் நிச்சயம் எங்களுடன் தான் வருவார்கள்….

மேலும்...

சசிகலாவின் பலே ஐடியா – சினிமாவை விஞ்சிய டிவிஸ்ட்!

சென்னை (08 பிப் 2021): சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார் சசிகலா. சசிகலா பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி இன்று புறப்பட்டார். காலை 10.30 மணியளவில் தமிழக எல்லைக்குள் வந்த அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக கொடியுடன் பயணம் மேற்கொள்ள கூடாது என சசிகலாவை தமிழக போலீசார் எச்சரித்திருந்த நிலையில்…

மேலும்...

சசிகலா பின்னால் 50 எம்எல்ஏக்கள் – பீதியில் எடப்பாடி தரப்பு!

சென்னை (04 பிப் 2021): சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்து வருகிறது. பெங்களூரில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வருகைதரவிருக்கிறார். அவருக்கு 50 எம்எல்ஏக்களும் ஆறு அமைச்சர்களும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் கடலே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதப் போவதாக தினகரன் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டல எம்எல்ஏ ஒருவர் 50 லட்சம் ரூபாய் வெள்ளி வாள் பரிசளிக்கஉள்ளதாகவும்…

மேலும்...

ராமதாஸ் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை – ஆனால் தேர்தல் கூட்டணி குறித்து இல்லையாம்!

சென்னை (31 ஜன 2021): வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் பாமக வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையில் டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருப்பதால் அதிமுகவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி இழுபறியிலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். சுமார் 2 மணி நேரம்…

மேலும்...

சசிகலா வரும் காரில் அதிமுக கொடி – அதிர்ச்சியில் எடப்பாடி!

சென்னை (31 ஜன 2021): பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து சென்னை வரும் சசிகலாவின் காரில் அதிமுக கொடி பறப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 20 -ம் தேதி லேசான கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்தே நேரடி விடுதலை செய்யப்பட்டார். இதற்கான ஒப்புதலும் சிறைதுறை சார்பாக மருத்துவமனை…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் – ஜேபி நட்டா எடப்பாடி சந்திப்பு திடீர் ரத்து!

மதுரை (30 ஜன 2021): அதிமுக பாஜக கூட்டணியில் 62 தொகுதிகளை பாஜக கேட்டு அடம்பிடிப்பதால் அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜ, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட்டு கேட்டு அடம் பிடிக்கின்றன….

மேலும்...

அமமுக, அதிமுக இணைப்பு – எடப்பாடிக்கு கல்தா: சசிகலா வருகைக்குப் பிறகு டிவிஸ்ட்!

சென்னை (30 ஜன 2021): சசிகலா விடுதலையாகியுள்ள நிலையில் அமமுக, அதிமுக மீண்டும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை இன்றைய நமது எம்ஜிஆர் கட்டுரையும் தெளிவுபடுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், கொரோனா பாதிப்பால் பெங்களூருவிலுள்ள விக்டோரியா அரசு மருத்துமனையில் தொடர் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தநிலையில், சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ளநிலையில், எடப்பாடி பழனிசாமியையும், பா.ஜ.கவையும் கடுமையாக சாடி நமது…

மேலும்...