அதிமுக எம்.எல்.ஏ திமுகவில் தஞ்சம்!

சென்னை (10 அக் 2020): விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 2016 சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உமா மகேஸ்வரி. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் இணைந்த 18 எம்.எல்.ஏக்களில் உமா மகேஸ்வரியும் ஒருவர். இதனால் உமா மகேஸ்வரி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 2019-ல்…

மேலும்...

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை (07 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சமி ஒருமனதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்ற குழப்பம் ஏறக்குறைய இரண்டு மாத காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக தெரிவித்தார். கடந்த சில…

மேலும்...

என் பதவியை யாராலும் பறிக்க முடியாது – அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திட்டவட்டம்!

சென்னை (06 அக் 2020): அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பதவியை பறிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை மதுசூதனன் மறுத்துள்ளார். சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் அதிமுகவில் சலசலப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், “அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவியை என்னிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது. அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு. மதுசூதனன்…

மேலும்...

சசிகலாவுக்கு எடப்பாடி ரகசிய தூது – ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ்!

சென்னை (06 அக் 2020): சசிகலாவின் விசுவாசமிக்க தொண்டரான எடப்பாடி சசிகலாவின் தலைமையில் அதிமுகவை இயக்க தயாராகி வருவதாகவும், அதற்காக ரகசிய தூதும் விடப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அதிமுகவிற்கு…

மேலும்...

அதிமுக முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இல்லையாம் – அப்படின்னா யார்?

சென்னை (03 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக சசிகலாவை அறிவிக்க அதிமுக தயாராகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் சசிகலா தலைமையை அதிமுக ஏற்க தயாராகிவிட்டதாகவும் தெரிகிறது. சசிகலா தலைமையை அதிமுக மூத்த தலைவர்கள் ஏற்க தயாராகி விட்டதாகவும், வருகிற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளருக்கான அறிவிப்பு அதிமுகவில் எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பங்களுக்கு அடுத்து, அக்கட்சியின் நிரந்த பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா…

மேலும்...

சசிகலாவுக்கு புகழாரம் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஓபிஎஸ் இபிஸ்!

சென்னை (28 செப் 2020): சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ,கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் பரபரப்பான இந்த செயற்குழுவில் முதலமைச்சராக்கியது யார்? என ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் எழுதியுள்ளது. தன்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என ஓ.பி.எஸ். பேசியதாகவும் இருவரையுமே முதலமைச்சராக்கியது…

மேலும்...

அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சென்னை (28 செப் 2020): அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. * அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு…

மேலும்...

விடுதலைக்கு தயாராகும் சசிகலா!

சென்னை (21 செப் 2020):சிறையில் உள்ள சசிகலா தனது அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 1991-96ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்த நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தாவிடில்…

மேலும்...

அதிமுகவில் உட் பூசல் – டிடிவி தினகரன் டெல்லி பயணம்!

சென்னை (20 செப் 2020): அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கோஷமிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஜனவரியில் விடுதலையாவார் என செய்திகள்…

மேலும்...

அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்!

சென்னை (19 செப் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்….

மேலும்...