முன்னாள் அதிமுக அமைச்சருடன் கள்ள உறவு – பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார்!

சென்னை (28 மே 2021): முன்னள் அமைச்சருடன் கள்ள உறவில் இருந்ததாகவும், மூன்று முறை கருகலைப்பு செய்ததாகவும் தமிழ் நடிகை ஷாந்தினி பரபரப்பு புகார் அளித்துள்ளார். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும்,…

மேலும்...

அலறும் தொண்டர்கள் – பதறும் அதிமுக தலைமை!

சென்னை (30 ஏப் 2021): ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுகவினருக்கு தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், “வாக்குக் கணிப்பு”-“எக்சிட் போல்” என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித்…

மேலும்...

அதிமுக நிர்வாகிகள் பலர் நீக்கம் – கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!

சென்னை (13 ஏப் 2021): அதிமுகவில் நடந்து முடிந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களால் உட் கட்சி பூசல் வெடித்தது. இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்த பலரும் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து கடும் அதிருப்தியடைந்தனர். அறந்தாங்கியில் சில நாட்களில் பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால், ஆலங்குடி, திருமயம் தொகுதியில் முடிவுக்கு வரவில்லை. அதாவது திருமயம் தொகுதியில்…

மேலும்...

ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி!

சென்னை (30 மார்ச் 2021): வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டி பாமகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்…

மேலும்...

அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்!

சென்னை (30 மார்ச் 2021): கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாக, அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கழகம் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,…

மேலும்...

நீக்கப்பட்ட பிரதமர் மோடி – பாஜகவில் பரபரப்பு!

சென்னை (28 மார்ச் 2021): தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைக்கு அஞ்சி, பாஜக வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் மோடியின் பெயர் தொடர்ந்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே எழுதப்பட்ட மோடியின் பெயர் ஒயிட்வாஷ் மூலம் அழிக்கப்படுகின்றன.. அதிமுக மட்டுமல்லாமல் பாஜக வேட்பாளர்களும் மோடியை தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்துகின்றனர்….

மேலும்...

மோடி எடப்பாடி குறித்த சர்ச்சை பேச்சு – ஆ.ராசா மீது வழக்கு பதிவு!

சென்னை (28 மார்ச் 2021): திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ வேண்டும் – ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (28 மார்ச் 2021): எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ்ந்து தி.மு.க. ஆளுகின்ற காட்சியை பார்க்க வேண்டும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (28-03-2021), ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, காங்கேயத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, “தி.மு.க.வை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயிருக்கிறார்கள்; தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில்…

மேலும்...

சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக – பச்சை கொடி காட்டும் ஓபிஎஸ்!

சென்னை (24 மார்ச் 2021): தேர்தலுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அதிமுக இயங்க வாய்ப்பு உள்ளதாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ,…

மேலும்...

பிரிக்கப்போவது அமமுக – ஜெயிக்கப்போவது திமுக!

சென்னை (24 மார்ச் 2021): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமமுக தலைமையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலும் கூட்டணி அமைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சீமானும் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். பல முனை தாக்குதல் நடத்தப்படுவதால் யாருக்கு…

மேலும்...