கொரோனாவால் இறப்பவர்களை எங்கள் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் – பிரதமருக்கு 9 ஆம் வகுப்பு மாணவி கடிதம்!

மதுரை (24 ஏப் 2020): கொரோனாவால் இறப்பவர்களை எங்கள் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று 9 ஆம் வகுப்பு மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி பெரு மாள்கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் மகள் தென்னரசி. வாடிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கொரோனாவால் இறப்பவர்களை அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்…

மேலும்...

பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து!

புதுடெல்லி (24 ஏப் 2020): பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் புனித ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில் இந்த நோன்பு தொடங்குகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ரம்ஜான் முபாரக்! அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த புனித மாதம், ஏராளமான கருணை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தையும் கொண்டு வரட்டும்….

மேலும்...

அமைச்சரை தாக்கியது கொரோனா வைரஸ்!

மும்பை (24 ஏப் 2020): மஹாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிர அமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ஊரடங்கு காலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது குறித்து கடந்த வாரம் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத், காவல்துறை மூத்த உயரதிகாரியுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அந்த காவல் உயரதிகாரிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் மரணம்!

குர்ணுல் (24 ஏப் 2020): ஆந்திர மாநிலம் குர்ணூலை சேர்ந்த புகழ் பெற்ற இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் (76) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார். டாட்கர் இஸ்மாயில் ஹுசைன் கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். ஆனால் சில தினங்களிலேயே அவர் உயிரிழந்தார். அவர் மரணித்த பின்பே அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகியது. அதுவே அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை…

மேலும்...

தமிழகத்துக்கு இது மிகப்பெரிய ஆறுதல்!

சென்னை (24 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அதேசமயம் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில் பலர் குணமடைந்து வீடு திரும்புவது ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்திலும் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் பலர் குணமடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக குணமடைந்தோர் விகிதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில்…

மேலும்...

அமைச்சர் உட்பட ஒரேநாளில் 778 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

மும்பை (24 ஏப் 2020): மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்‍கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக அம்மாநிலத் தலைநகர் மும்பையின் நிலை மோசமாகி வருகிறது. மஹாராஷ்ட்ராவின் மொத்த கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மும்பையில் உள்ளனர். அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 427…

மேலும்...

இனியும் இன்னொரு ஹிட்லர் வேண்டாம் – புதிய காந்திதான் வேண்டும்: ஹிந்த் அல் காசிமி!

துபாய் (23 ஏப் 2020): கோவிட் 19 உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த நோய் பரவ முஸ்லிம்கள்தான் காரணம் என்பதாக இந்துத்வா கொள்கை வாதிகளும், ஊடகங்களும் நச்சுக் கருத்துகளை பகிர்ந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலே இந்திய முஸ்லிம்கள் அடைந்து வரும் சஞ்சலங்களையும், அடக்குமுறைகளையும் உலக நாடுகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் இன்னும் சில ஊடகங்களிலும் இந்திய…

மேலும்...

ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால்தான் அதிக உயிரிழப்பு – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!

வாஷிங்டன் (23 ஏப் 2020): கொரோனாவுக்கு வழங்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்தால்தான் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இன்றளவும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போன்று தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு, இந்தியாவில் மலேரியாவுக்கு தருகிற ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் நன்றாக வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்து ஏற்றுமதிக்கு…

மேலும்...

இத்தனை பேரை கொரோனா பாதிக்குமா? மும்பைக்கு மத்திய குழு கடும் எச்சரிக்கை!

புதுடெல்லி (23 ஏப் 2020): மும்பையில் வரும் மே 15-ம் தேதிக்‍குள் 6 லட்சத்து 50 ஆயிரம் மக்‍கள் கொரோனாவால் பாதிக்‍கப்படும் அபாயம் இருப்பதாக மத்தியக் குழு எச்சரித்துள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனே நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக அண்மையில் மத்திய அரசு எச்சரித்திருந்தது. நிலைமையை நேரில் ஆய்வு செய்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தலா 5 பேர் அடங்கிய 2 குழுக்‍களையும் மத்திய அரசு அமைத்தது….

மேலும்...

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவரை தாக்கினால் கடும் தண்டனை- அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதுடெல்லி (23 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். ‘கொரோனா’ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, தாக்‍கியவர்கள் மீது ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு…

மேலும்...