கொரோனா எதிரொலி – ஈரானில் மேலும் 85000 கைதிகள் விடுதலை!

தெஹ்ரான் (17 மார்ச் 2020): சீனா இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. அந்த வகையில் ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 11,178 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டுச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…

மேலும்...

கோவையில் அதிர்ச்சி – கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

கோவை (17 மார்ச் 2020): கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. அந்த குழு தாய்லாந்து திரும்பிச் செல்ல இருந்த நிலையில் இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

மும்பை (17 மார்ச் 2020): கொரோனா பாதித்தவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 3 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 100 ஐக் கடந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் 64 வயது மதிக்கத்தக்கவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூறை எட்டியதும் வைரஸ் பரவல் மிக வேகமாகக் கூடத் தொடங்கியுள்ளது. அந்த நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்த மிகவும் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்தியா இதுவரை சிறப்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல்…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

சியாட்டில் (17 மார்ச் 2020): அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முயற்சியில் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதனை முயற்சியாக ஒருவருக்குத் தடுப்பூசியாகச் செலத்தியுள்ளனர். இது இந்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வேட்டையைத் துவக்கி வைத்துள்ளது. சியாட்டில் நகரிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Kaiser Permanente Washington Research Institute) விஞ்ஞானிகள், வெகு குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசியை திங்களன்று தன்னார்வலர் ஒருவரின் கையில் கவனமாகச் செலுத்தி தங்களது முதல் கட்ட…

மேலும்...

குடிமகன்களுக்கு சோக செய்தி – டாஸ்மாக் அனைத்தும் மூடல்!

சென்னை (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட. தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கவ் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

தமிழகத்தில் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை!

சென்னை (17 மார்ச் 2020): தமிழக விமான நிலையங்களில் நேற்று வரை மொத்தம் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிர் பலி வாங்கிவரும் கொரோனா, இந்தியாவிலும் இரண்டு உயிர்களை கொன்றுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலை…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை – திங்கள் முதல் தொடக்கம்!

வாஷிங்டன் (16 மார்ச் 2020): கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் திங்கள் முதல் தொடங்கியது. உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு முதல் தடுப்பு ஊசி மருந்து சோதனை திங்கள்கிழமை அமெரிக்காவில் பரிசோதிக்கப்படும் என்ற தகவலை அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள்…

மேலும்...

இந்தியாவில் 15 நாட்களில் 110 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அதிக அளவில் மிரட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 110 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93 நோயாளிகள் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர். இதில் 13 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இரண்டு பேர்…

மேலும்...

வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க – முதல்வர் எச்சரிக்கை!

சென்னை (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்கு பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த நபா்கள் கூட்டம் நிறைந்த…

மேலும்...

கொரோனா வைரஸ் – ஸ்பெயினில் ஒரே நாளில் 100 பேர் மரணம்!

ஸ்பெயின் (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 100 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை முன்னிட்டு, நோயின் மையமாக ஐரோப்பா மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது. ஐரோப்பாவில், இத்தாலிக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டில் வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 7,753 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 288 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயியினில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்...