ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (22 ஏப் 2022): நாடு முழுவதும் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் ஹலால் சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் வழக்கறிஞர் விபோர் ஆனந்த், நாட்டில் 85 சதவீதம்பேர் ஹலால் பொருட்களை விரும்பவில்லை எனக்கூறி மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த மனுவில் “இந்திய அரசியலமைப்பின் 14, 21 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளின்படி இதனை செயல்படுத்த வேண்டும். ….

மேலும்...

டெல்லி ஜஹாங்கிர்புரி முஸ்லீம்களின் கட்டிடங்களை இடிக்க மறு உத்தரவு வரும்வரை உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (21 ஏப் 2022): வடக்கு டெல்லி ஜஹாங்கிர்புரியில் முனிசிபல் கார்ப்பரேஷன் (என்.டி.எம்.சி) மேற்கொண்ட இடிப்பு நடவடிக்கை தொடர்பான தற்போதைய உத்தரவை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜஹாங்கிர்புரியில் நடத்தப்பட்ட இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் மற்றும் பலர் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர். காவாய் ஆகியோர் இந்த இடிப்பு குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்….

மேலும்...

டெல்லி கலவரம் – கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தியையொட்டி கலவரம் வெடித்ததாகக் கூறப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க என்டிஎம்சி இடிப்பு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதனை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, கபில் சிபல், பி.வி.சுரேந்திரநாத் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற பார்வைக்குக் கொண்டு சென்றனர். இதன் பேரில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முன்னதாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில்…

மேலும்...

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

இஸ்லாமாபாத் (04 ஏப் 2022): பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் நேற்று இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார். அதேவேளை இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டதால், புதிதாக விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதே…

மேலும்...

ஹிஜாப் தடை உத்தரவை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடெல்லி (28 மார்ச் 022): பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ஆதரித்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கறிஞர் எம்.ஆர்.ஷம்ஷாத் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் இரண்டு முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாமிய நூல்கள் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தின்…

மேலும்...

ஹிஜாப் தடை விவகாரம் – உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

புதுடெல்லி (24 மார்ச் 2022): தேர்வு நெருங்கி வருவதால் ஹிஜாப் தடை விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லுரிகளில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய முஸ்லீம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (16 மார்ச் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய அனைத்து மனுக்களையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இஸ்லாத்தில் ஹிஜாப் அவசியமான ஒன்று அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் மாணவிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில்…

மேலும்...

மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (16 மார்ச் 2022): பிரபல மலையாள தொலைக்காட்சி சேனலான மீடியா ஒன் மீதான ஒன்றிய அரசின் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீடியா ஒன் தொலைக்காட்சி கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அத்தொலைக்காட்சி நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் கேரள நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான…

மேலும்...

ஹிஜாப் மத அடிப்படையில் அவசியமில்லையா? – உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி முஸ்லிம் மாணவிகள் நிபா நாஸ் மற்றும் மணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவர் சார்பிலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்த மனுவில், மத சுதந்திரம் மற்றும் மனசாட்சி சுதந்திரம் என்ற இரு வேறுபாட்டை உருவாக்குவதில் உயர்நீதிமன்றம் தவறிழைத்துள்ளதாக மனுதாரர்கள் மிகவும் தாழ்மையுடன் சமர்ப்பிப்பதாக…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (11 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...