கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 139 பேர் பலி – திக்குமுக்காடும் மகாராஷ்டிரா!

மும்பை (05 ஜூன் 2020): மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 139 பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. லாக்டவும் அமலில் இருந்தபோதும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. மேலும் நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தலைநகர் மும்பையிலும் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் கூடி கொண்டே வருகிறது. இந்தநிலையில் மராட்டிய மாநில சுகாதாரத் துறை…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார்!

புதுடெல்லி (05 ஜூன் 2020): ஒளிபரப்பு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து ரிபப்ளிக் டிவி, மற்றும் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும், விவாதங்களையும் தொடர்ந்து நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஒளிபரப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகக் ரிபப்ளிக் தொலைக்காட்சி, மற்றும் அதன் ஹோல்டிங்…

மேலும்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப 15 தினங்கள் போதும் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (05 ஜூன் 2020): லாக்டவுனால் ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர்கள் ஊருக்கு அனுப்ப 15 தினங்கள் போதுமானது என்று மத்திய மாநில அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை குறித்து ஒரு பொதுநல மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.க ul ல் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம், “நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம்…

மேலும்...

இந்தியாவில் அமைதி காக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் – காரணம் ஏன்?

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 8 நாட்களாக ஒரு ஊடக சந்திப்பைக் கூட நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் கோவிட் 19 பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது அதேவேளைல் இந்தியாவில் கோவிட் -19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என்றாலும், உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா ஒரு வளர்ந்து வரும் கோவிட் -19…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகன் உடல் நிலை குறித்து மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

சென்னை (04 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜே. அன்பழகன் 80 சதவீதம் வெண்டிலேஷன் உதவியிலேயே சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் , ஜூன் 2 ஆம் தேதி இரவு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத் திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா டெஸ்ட்…

மேலும்...

சென்னை திருச்சி விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு தமிழர்கள் தொடர்பு கொள்ள தமுமுக உதவி எண் அறிவிப்பு!

சென்னை (04 ஜூன் 2020) வெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவும் முகமாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: தாம்பரம் எம்.யாக்கூப் 9710217545 துணைப் பொதுச் செயலாளர், மமக எஸ்.கே.ஜாகிர் உசேன் 9884444350 மாவட்ட தலைவர், செங்கல்பட்டு வடக்கு, தமுமுக-மமக திருச்சி விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள்: உதுமான் அலி 98944 44772 மாவட்ட…

மேலும்...

ஒரே நாளில் 260 பேர் பலி – இந்தியாவை அதிர வைக்கும் கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (045 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினரை உடனடியாக விடுதலை செய்க – அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அலகாபாத் (03 ஜூன் 2020): தப்லீக் ஜமாஅத்தின் உறுப்பினர்களையும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த மற்றவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷாத் அன்வர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் குப்தா மற்றும் நீதிபதி சவுராப் ஷியாம் ஷம்ஷேரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திங்களன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், இந்திய அரசியலமைப்பின் 21 வது…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (03 ஜூன் 2020): திமுக-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 11 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் திமுக-வின்…

மேலும்...

குவாரண்டீன் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என பெயரிட்ட தம்பதிகள்!

இம்பால் (03 ஜூன் 2020): தனிமைப்படுத்தல் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என்று பெயரிட்டு மகிழந்துள்ளனர் அந்த குழந்தையின் தம்பதிகள். மே 27 அன்று கோவாவிலிருந்து சிறப்பு ரயிலில் மணிப்பூர் வந்த பயணிகள் இமானுவேல் என்ற பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர் . அவர்களில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருந்த பெண் மீது மருத்துவர்களால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் “அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை சிக்கல்கள் இல்லாமல் ஆண் குழந்தையை பிரசவித்தார். தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள்”…

மேலும்...