மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

சென்னை (09 ஜூன் 2020): எதிர் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் 11 வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா? அல்லது தேர்வு…

மேலும்...

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதியை மீறும் பாஜக எம்பி!

புவனேஸ்வர் (09 ஜூன் 2020): சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதியை மீறி வருகிறார் ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி. நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அங்கு பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.பி. அபராஜிதா சாரங்கி, பறக்கும் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் சென்று நேற்று கலந்து கொண்டார். இதில் சமூக இடைவெளி…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு செவ்வாய்க்கிழமை நிலவரம்!

புதுடெல்லி (09 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடந்து அதிகரித்தவண்ணமே உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் 9,987 அதிகரித்து 2,66,598 ஐ எட்டியுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 266 அதிகரித்து 7,466 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார விவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் இருமல் – பரபரப்பில் திமுகவினர்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருமல் இருந்ததால் கொரோனா அறிகுறியாக இருக்குமோ என அவரது உறவினர்களும் திமுகவினரும் பதற்றத்தில் காணப்பட்டனர். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவைரஸ் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், மிகுந்த வருத்ததில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி ஸ்டாலினுக்கு திடீரென தொடர்ந்து இருமலும், லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என,…

மேலும்...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

புதுடெல்லி (08 ஜூன் 2020): டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளர். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அதன்பிறகு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவர் எந்தக் கூட்டத்திலும்…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு!

ஐதராபாத் (08 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், தற்போது தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடத்தாமல் ஏற்கனவே நத்தப்பட்ட உள் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வில் தேர்ச்சி…

மேலும்...

சென்னை குறித்து அதிர்ச்சித் தகவல் – பிரபல பத்திரிகையாளரின் பதற வைக்கும் பேட்டி!

சென்னை (08 ஜூன் 2020): சென்னையில் பரவும் கொரோனா குறித்தும், வெளியில் சுற்றாதீர்கள், மருத்துவமனைகளில் உரிய படுக்கைகள் இல்லை என்று கண்ணீர் உடன் பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை எனக்கும், என் தம்பிக்கும்…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு!

சென்னை (08 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் விஸ்வரூப உயர்வு!

புதுடெல்லி (08 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் மொத்த நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 7,135 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திங்கள்கிழமை காலை முடிவடைந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப்…

மேலும்...