இந்நேரம்

உலகிலேயே பாதுகாப்பான நாடு எது தெரியுமா?

கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தர ஆய்வதில் உலகில் முன்னணி வகிக்கும் Numbeo நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) உலகில் 142 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான இந்த பட்டியலில் கத்தார் நாடு முன்னணி வகிக்கிறது. Numbeo எனும் பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும்…

மேலும்...

தமிழ்நாட்டு கவர்னருக்கு எதிரான கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பு!

சென்னை (15 ஜன 2023): தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் ஒன்றை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தை ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். தமிழக சட்டசபையில், அரசு தயாரித்த உரையில் சில குறிப்பிட்ட பகுதிகளை பேசும்போது கவர்னர் ஆர்.என்.ரவி அதில் உள்ள பலதை வாசிக்கவில்லை. மேலும் சில கருத்துகளை அவர் சொந்தமாகவும் பேசினார். கவர்னரின் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்…

மேலும்...

மசூதிகள் பராமரிப்பு நிதி ரூ 10 கோடியாக உயர்வு – முதல்வர் ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா நன்றி!

சென்னை (14 ஜன 2023): பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை 10 கோடியாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய தீர்மானத்தில் நான் பேசியபோது தமிழ்நாடு வக்ஃபு வாரியம் வழியாக தமிழ்நாடு பள்ளிவாசல்களுக்கு வழங்கக்கூடிய Major Repair Grant (MRG) நிதியை அதிகரித்து தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை…

மேலும்...

விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (14 ஜன 2023): உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகம் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு இருக்கும் விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஹஜ்ஜில் விஐபி ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவரவும், விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரதமர் மோடி பதவியேற்ற முதல் நாளிலேயே தீர்மானத்தை முன்வைத்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது ஹஜ் தொடர்பாக விஐபி…

மேலும்...

என் கணவரின் உயிருக்கு ஆபத்து – டாக்டர் கபீல்கான் மனைவி தலைமை நீதிபதிக்கு கடிதம்!

லக்னோ (01 மார்ச் 2020): “என கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று டாக்டர் கஃபீல்கான் மனைவி சபிஸ்தா கான், அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தன. ஆனால், டாக்டர் கபீல்கான் தன் சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றினார். கபீல்கானின் நடவடிக்கையால் எனினும் அவர் மீது பழி சுமத்தி வேலையை விட்டு நீக்கியது யோகி ஆதித்யநாத் அரசு மேலும் அவரை…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 15: ஆயிரம் ரூபாய் நோட்டு!

வெகு நாட்களுக்குப் பிறகு சேது சபைக்கு வந்திருந்தார். “இவ்வளவு நாள் ஆப்சென்ட் ஆன இவரை என்ன பண்ணலாம்?”  என்று ஆரம்பித்து வைத்தார் பிரகாசம். “பெஞ்சு மேல ஏத்திடுவோமா?” – அருள் “தோப்புக்கரணம்?” – நல்லையா “அபராதம் விதிச்சிடுவோம்” என்றார் ஜி. “இது என்னய்யா அநியாயமாக இருக்கிறது? இதுவரை விளக்கிய பாடங்களை எல்லாம் நீங்கள் நன்றாக உள்வாங்கிக் கொள்வதற்காகத்தான் இந்தச் சிறிய இடைவெளி. “ என்றார் சேது கண்சிமிட்டலுடன். “என்னது?  சிறிய இடைவெளியா?  இந்த சமாளிஃபிகேசனெல்லாம் வேண்டாம்.  முதல்ல…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 14 : பணம் காய்க்கும் மரம்

பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மத்திய வங்கி (Central Bank) இருக்கும். அதன் பணிகளுள் முக்கியமானது அந்த நாட்டிற்கான கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிடுவதாகும். இது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்தப் பணியை இன்றளவும் மற்ற எல்லா மத்திய…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!

டேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஃபிரான்ஸிற்கும் ஆங்கிலோ-டச்சு, ரோம், ஸ்பெயின் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றது. கி.பி 1688 முதல் 1697 வரை நடந்த இந்த யுத்தத்தை ‘ஒன்பது ஆண்டு யுத்தம்’ (Nine Years’ War) என்றே வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த யுத்தத்தின் ஒரு அங்கமாக 1690, ஜூலை 10 அன்று ‘பீச்சி ஹெட்’ என்ற இடத்திற்கு…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 12: டேல்லி குச்சிகள்!

இந்தக் கதையில் பண்ட மாற்றிலிருந்து பண நோட்டிற்கு வெகு சீக்கிரம் வந்து விட்டோம். ஆனால் உண்மையில், இந்த மாற்றத்திற்கு வெகுகாலம் பிடித்தது. பல நூற்றாண்டுகள்! தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் வருவதற்கு முன்பு ஒவ்வொரு பிரதேசத்திலும் வசித்த மக்கள் வெவ்வேறு விதமான பொருட்களை ‘நாணயங்களாக’ பயன்படுத்தியிருக்கிறார்கள். பண்டைய சீனா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற பிரதேசங்களில் ஒருவகை சிப்பிகள் நாணயங்களாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஜப்பானில் ‘கோகு’ எனப்படும் அரிசி, யூதர்களிடையே…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 11: கள்ளச் சீட்டும் ‘நல்ல’ சீட்டும்!

நிர்வாகச் சபைத் தலைவர்களின் கூட்டத்தில் ‘கள்ளச் சீட்டுகளைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது’ என்று சொன்ன அய்யாவு, “துண்டுச் சீட்டுகளை பொற்கொல்லர்களாகிய நாங்கள் எழுதிக் கொடுப்பதற்குப் பதிலாக நிர்வாகச் சபையே அவற்றை அச்சிட்டு வெளியிடுவதுதான் ஒரே வழி” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்?” என்று கேட்டார் ஒரு தலைவர். “நாம் முதல் முதலாக தங்க நாணயங்களை வெளியிட்டோமே, நினைவிருக்கிறதா? வெளியார் யாரும் தங்கத்தை உருக்கி அவர்களே நாணயங்களை செய்து கொள்ளக் கூடாது என்பதற்காக நிர்வாக சபையின் ஒப்புதலுடன்…

மேலும்...