பணம் வந்த கதை – பகுதி 10: ரகசிய வித்தை
தன்னை நாடி வந்த பிற ஊர் பொற்கொல்லர்களை அய்யாவு கனிவாக வரவேற்றார். அவர்கள் வருவார்கள் என்பதை அவர் எதிர்பார்த்தார் என்றுகூடச் சொல்லலாம். உள்ளூரில் அமோகமாக நடந்துக் கொண்டிருந்த தம் தொழிலை வெளியூர்களிலும் கிளை பரப்ப அவர் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார். அந்தந்த ஊர்களில் உள்ள பொற்கொல்லர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அய்யாவுவால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அவர்களிடம் தானே வலியச் செல்வதைவிட அவர்களே தம்மை நாடி வந்தால் நன்றாக இருக்கும் என்பதும் அய்யாவுவின் எதிர்பார்ப்பு. பழம் கனிந்து பாலில்…