இந்நேரம்

பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 10: ரகசிய வித்தை

தன்னை நாடி வந்த பிற ஊர் பொற்கொல்லர்களை அய்யாவு கனிவாக வரவேற்றார். அவர்கள் வருவார்கள் என்பதை அவர் எதிர்பார்த்தார் என்றுகூடச் சொல்லலாம். உள்ளூரில் அமோகமாக நடந்துக் கொண்டிருந்த தம் தொழிலை வெளியூர்களிலும் கிளை பரப்ப அவர் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார். அந்தந்த ஊர்களில் உள்ள பொற்கொல்லர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அய்யாவுவால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அவர்களிடம் தானே வலியச் செல்வதைவிட அவர்களே தம்மை நாடி வந்தால் நன்றாக இருக்கும் என்பதும் அய்யாவுவின் எதிர்பார்ப்பு. பழம் கனிந்து பாலில்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 9: திட்டத்தின் அடுத்த கட்டம்!

அய்யாவு கையெழுத்திட்ட துண்டுச் சீட்டுகளையே தங்களின் வியாபாரப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி வந்த மக்கள், அதற்குண்டான தங்க நாணயங்கள் அய்யாவுவிடம் இருக்கின்றன என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள்.  ஆனால் அய்யாவு மறக்கவில்லை.  ‘எனது இரும்புப் பெட்டகத்தில் ஆயிரக்கணக்கான தங்க நாணயங்கள் வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கின்றன.  இவ்வளவு செல்வத்தையும் முறையாக பயன்படுத்தாவிட்டால் என்னை விட அடி முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.  இந்த நாணயங்களெல்லாம் என்னுடையவை அல்ல என்பதென்னவோ உண்மைதான்.  ஆனால் அவை என்னுடைய கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன? என்னிடம்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 8: Back to அய்யாவு’s story!

“எங்கே விட்டேன் அய்யாவு கதையை?” என்று கேட்டார் சேது. “சமூகத்துல பெரும் செல்வாக்கு உள்ளவனா ஆகணும் என்பதற்காக ஊர் மக்களையெல்லாம் கடனாளிகளாக்க திட்டம் போட்டான் என்று சொன்னீங்க” “கரெக்ட்.. அய்யாவு திட்டம் போட்டபடியே எல்லாம் நடந்தது. ஊர் மக்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அவனுடைய கடனை ஒட்டு மொத்தமாக அடைக்க விரும்பினாலும் அது நடக்காது என்பதை யாருமே உணரவில்லை. ‘பணம்’ என்ற ஒரு புதிய ‘வஸ்து’வின் மூலம் அவர்கள் அனைவரையும் அவன் தூண்டிலில் சிக்கிய மீன்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பொருளாதார அடியாள் பகுதி -7 பணம் வந்த கதை

“‘பொருளாதார அடியாள்’ பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவர்கள் கோட் சூட் போட்ட நவீன அடியாட்கள். இப்பூமியின் இயற்கை வளங்களை, அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்களை, சில குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணம் படைத்த சில குடும்பங்களின் ஆளுகைக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் இவர்களின் வேலை. இது ஒரு வகையான கார்ப்பரேட் சாம்ராஜ்யம். இந்த அடியாட்களின் மோசடிகளையெல்லாம் சர்வசாதாரணமாக மில்லியன், பில்லியனை எல்லாம் தாண்டி டிரில்லியனில்தான் கணக்கு போட வேண்டியிருக்கும். இவர்களின் சேவைக்காக இவர்கள் பெரும் ஊதியமும்…

மேலும்...

பணம் வந்த கதை பகுதி – 6: ஈக்வடோருக்கு வந்த சோதனை!

அய்யாவுவின் கதையைச் சொல்லிக் கொண்டே வந்த சேது, ‘அய்யாவுவிடம் கடன் பெற்றிருந்தவர்கள் அவனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்படியான 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்?’ என்ற கேள்வியுடன் நிறுத்தினார். சபையில் சிறிது நேரம் மௌனம். “என்னங்க.. இப்படி ஒரு சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே?” என்றார் அதியமான். “அதானே.. மீதி 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்?” என்றார் பிரகாசம். “பையில இருந்தாத்தானே கையில வரும்? அந்த ஊர் முழுக்க புழக்கத்தில் இருக்கும் மொத்த நாணயங்களே 10100 தான்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி – 5: நானூறு நாணயங்கள் எங்கே?

ஓராண்டு உருண்டோடிப் போனது. ‘பண’ப் பரிவர்த்தனைக்கு மக்கள் வெகுவாக பழகி விட்டார்கள். அய்யாவுக்கு தன்னுடைய விளைச்சலை அறுவடை செய்யும் ஆசை வந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து கட்கத்தில் இடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனிடம் கடனாக நாணயங்களைப் பெற்றுச் சென்றவர்கள் ஆண்டு முடிவில் 100 நாணயங்களுக்கு 5 அதிகப்படியான நாணயங்களை சேர்த்துத் திருப்பித்தர வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம்? முதலில் பலகார வியாபாரி. பணப்புழக்கம் ஏற்பட்ட பிறகு அவனது அன்றாட நடைமுறை வெகுவாக மாறி…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி – 4: நாணயம் வந்தது! வட்டியும் வந்தது! டும் டும் டும்!

ஒவ்வொரு நூறு நாணயத்திற்கும் ஐந்து நாணயங்கள் சேவைக் கட்டணம் என்பது சிறிய தொகையாகத் தெரிந்ததாலும் வேறு மாற்று வழி எதுவும் இல்லாததாலும் ஊர் மக்கள் அனைவரும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அதிகப்படியான அந்த ஐந்து நாணயங்களை அய்யாவு ‘சேவைக் கட்டணம்’ என்றுஅறிமுகப் படுத்தினாலும், அதன் உண்மையான பெயர் ‘வட்டி’! “நாணயங்கள் தேவைப்படுபவர்கள் அனைவரும் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை என் கடைக்கு வாருங்கள். உங்களுக்கான நாணயங்களை நான் தயார் செய்து வைக்கிறேன்.” என்று ஊர் மக்களை அனுப்பி வைத்தான்…

மேலும்...

பணம் வந்த கதை பகுதி – 3 தோன்றியது பணம்!

குறிப்பிட்ட அந்த நாளில் ஊர் பொது மைதானத்தில் ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து குழுமியிருந்தார்கள். அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சேதி கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் தலைவர்களும் மக்களும் வந்திருந்தனர். அய்யாவு அவர்களுக்கு ‘பணம்’ என்ற புதுமையான ஒரு முறையை விளக்கினான். “இங்கப் பாருங்க மக்களே, மேட்டர் ரொம்ப சிம்பிள். நம்ம எல்லோரிடமும் இருக்கும் எல்லா பொருள்களுக்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு பொருளை நீங்க விற்கனும்னு நினைச்சா நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்; அந்தப்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி – 2 அய்யாவு போட்ட மாஸ்டர் பிளான்!

நம்ம கதாநாயகனின் பெயர் அய்யாவு. தொழில் பொற்கொல்லன். சந்தைக் கூடும் மைதானத்தில் ஒரு ஓரத்தில்தான் அவனது தொழிற்சாலை இருந்தது. அவனது வாடிக்கையாளர்கள் அவனுக்குக் கொடுக்க வேண்டிய கூலிக்குப் பகரமாக அரிசி, பருப்பு, செருப்பு என்று எதையாவது கொண்டு வந்துக் கொடுப்பார்கள். அய்யாவுக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் அவன் இருக்குமிடத்திலேயே கிடைத்து விடுவதால் அவன் சந்தைக்குச் சென்று கூவ வேண்டிய தேவை ஏற்படாது. இருந்தாலும் அவ்வப்போது யாராவது அவனுடைய தொழிற்சாலைக்குள் தலையை நீட்டி, “என்னாண்ட ஆட்டுக்குட்டி கீது.. உன்னாண்ட…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி 1 – சந்தையில் விளைந்த சண்டை!

இப்போது நான் சொல்லப் போவது முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல. முழுக்க முழுக்க உண்மையும் அல்ல. இதில் எத்தனை சதவீதம் உண்மை, எத்தனை சதவீதம் கற்பனை என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதில் வரும் கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். இல்லை என்று மறுப்பதற்கில்லை. இருந்தாலும் ‘கதை’ என்ற சொல்லுக்கு ஒரு கவர்ச்சி உண்டு என்பதால் நானும் இதை ‘கதை’ என்றே சொல்லப் போகிறேன். நீங்களும் அவ்வப்போது ‘ம்..’ போட மறந்து விடாதீர்கள். இந்தக் கதையின்…

மேலும்...