ஹத்ராஸ் வழக்கை விசாரித்து வந்த ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை!

லக்னோ (25 அக் 2020): ஹத்ராஸ் கூட்டு வன்புணர்வு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் வழக்கை விசாரித்து வந்த மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த டி.ஐ.ஜி சந்திர பிரகாஷின் மனைவி புஷ்பா பிரகாஷ். அவருக்கு வயது 36. இவர் லக்னோவின் கோல்ஃப் சிட்டி பகுதியில் புஷ்பா தனது அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய…

மேலும்...

தாடி வளர்த்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தாடி வளர்த்ததற்காக முஸ்லிம் போலீஸ் அதிகாரி இந்திஸார் அலி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆடைக் குறியீட்டை மீறியதாகவும், தனது மேலதிகாரிகளின் அனுமதியின்றி தாடியை வளர்த்ததாகவும் ஒரு இந்திஸார் அளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராம்லா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரான இவர்,, கடந்த ஒரு வருடமாக தாடியை வளர்ப்பதற்கான அனுமதி கோரியிருந்தார் ஆனால் அதற்கான எந்த அனுமதியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தாடி வளர்த்தபோதும் அவருக்கு எச்சரிக்கை…

மேலும்...

நவராத்திரி விழாவில் பயங்கரம் – 19 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு!

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமையின் ஒரு பகுதியாக 19 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளர். புதன்கிழமை இரவு உத்தரப்பிரதேச மஹோபா மாவட்டத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களுக்குப் பிறகு வீடு திரும்பும் வழியில் சிறுமி மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை தனது வீட்டின் பின்புறம் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்….

மேலும்...

உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய அடுத்த கொடூரம் – 5 வயது சிறுமியையும் விட்டு வைக்காத காம கொடூரர்கள்!

லக்னோ (11 அக் 2020): உத்திர பிரதேசத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னரும் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஹர்டோய் மாவட்டத்தில் 5 வயது…

மேலும்...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான பெண் மீது அவதூறு பரப்பும் பாஜகவினர்!

லக்னோ(08 அக் 2020):உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் பரிதாபமாக சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, ரவி, ராம்குமார், சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது…

மேலும்...

அதிர்ச்சி சம்பவம் – உத்திர பிரதேசத்தில் மாணவரை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்!

காசியாபாத் (05 அக் 2020): உத்திர பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவரை 10 ஆம் வகுப்பு மாணவர்கள் நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒரு அதே பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். 17 வயதான அந்த மாணவர் மாணவியை சந்திக்க தனது 2 நண்பர்களுடன் காரில் சென்று உள்ளார். அவர்களை பின்தொடர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் 12 ம் வகுப்பு…

மேலும்...

ராகுல் காந்தி மீது போலீசார் தாக்குதல் நடத்தி கைது – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

லக்னோ (01 அக் 2020): உத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடவும், போலீசாரின் அடாவடியை எதிர்த்தும் இளம்பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக ஹத்ரஸ் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியில் சுற்றத்தவாறும்…

மேலும்...

உ.பி.யில் கொடூரம் – 19 வயது தலித் பெண் வன்புணர்ந்து கொலை!

புதுடெல்லி (29 செப் 2020): உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் பகுதியில், சண்ட்பா கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் பெண், கடந்த 14-ம் தேதி, அதே கிராமத்தை கிராமத்தை சேர்ந்த 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாக்கு துண்டிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மேல்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பரிதாபம் – இறந்த கொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கில் அஜாக்கிரதை!

காசியாபாத் (18 ஜூன் 2020): உத்திர பிரதேசம் காசியாபாத்தில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு நபரின் உடல், தகனத்தின் போது மின்சார தகனம் செயலிழந்த்தால் உடல் பாதி எரிந்து அநாதையாக கிடந்துள்ளது. 58 வயதான தொழிலதிபர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் காசியாபாத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய திங்கள் கிழமை காலை 11 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்படும்போது நடுப்பகுதியில் தகனம் செய்யும் எந்திரம் வேலை செய்யவில்லை….

மேலும்...

ஆசிரியர் தேர்வில் முறைகேடு – குடியரசுத் தலைவர் பெயர் தெரியாதவர் அதிக மதிப்பெண் எடுத்த அதிசயம்!

லக்னோ (10 ஜூன் 2020): உபியில் உதவி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்தது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வில், ராகுல் என்ற விண்ணப்பதாரர், தன்னை பணியில் சேர்ப்பதாகக் கூறி சிலர் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக பிரயாக்ராஜ் போலீஸ் விசாரணை மேற்கொண்டு கே.எல்.படேல் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தத் தேர்வில் 95…

மேலும்...