மத்திய அரசு மீது சுப்பிரமணியன் சாமி காட்டம்!

சென்னை (04 மே 2020): புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் கட்டணம் வசூலிப்பதற்கு பாஜக மூத்த தலைவர் திரு. சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திரு. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், பாதி பட்டினியில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கும் இந்திய அரசின் செயல் மோசமானது என கடுமையாக விமர்சித்தார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்துவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள…

மேலும்...

எங்களுக்கு இப்போதைக்கு அனுமதி கொடுங்க – நடிகைகள் கோரிக்கை!

சென்னை (04 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கக்கோரி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகையுமான குஷ்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த நடிகை…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (04 மே 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,409 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று மட்டும் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கும் கடலூரில் 122 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில்…

மேலும்...

கொரோனா கொடுமையில் இப்போது இது அவசியமா?

சென்னை (04 மே 2020): கொரோனா வைரஸ் ஒரு புறம் பரவிக் கொண்டு இருக்க டாஸ்மாக் கடைகளை வரும் 7 ஆம் தேதி திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறி இருப்பதாவது: தமிழகத்தில் வரும் 7 ம் தேதி முதல் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுb செயல்பட வேண்டும். டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்கள் திறக்க அனுமதிஇல்லை. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை மட்டுமே…

மேலும்...

மே.7 ஆம் தேதி முதல் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு!

புதுடெல்லி (04 மே 2020): மே 7 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் சர்வதேச விமானபோக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள்…

மேலும்...

நடிகர் ரஜினிக்கு சென்னை மாநகராட்சி கடிதம்!

சென்னை (04 மே 2020): சென்னை மாநகராட்சி சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் ரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளது. இதனால் தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள்,…

மேலும்...

மத உணர்வை காயப்படுத்தியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு!

மும்பை (04 மே 2020): மத உணர்வை காயப்படுத்தியதாக ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ஊடகத்தில் பேசிய அர்ணாப், பந்தாரா ரெயில்வே நிலையம் அருகில் பொது மக்கள் கூடியதாக பேசிய அர்ணாப் கோஸ்வாமி அவசியமில்லாமல் ஜும்மா மசூதியை குறிப்பிட்டு பேசினார். இது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்தது. இதுகுறித்து கல்விச் சங்கத்தின் செயலாளர் இர்ஃபான் அபூபக்கர் சேக் மும்பை பைடோனி காவல்…

மேலும்...

ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழான ரஷ்யா!

மாஸ்கோ (04 மே 2020): ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10,633 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலககை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் முதல் 10 நாடுகளில் ரஷ்யாவும் உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷ்யா இருந்தது. ஒரே மாதத்தில் அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில்…

மேலும்...

அலற வைக்கும் கொரோனா – ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பாதிப்பு!

சென்னை (03 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,341 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 203 பேரை…

மேலும்...

இதையெல்லாம் நாங்கள் கேட்டால் அரசியல் என்பார் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (03 மே 2020): ஊரடங்கிலும் டெண்டர் முறைகேட்டில் முதல்வர் எடப்பாடி படு பிசியாக உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், “பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்” என்று அப்பாவித்தனமாக ஒரு…

மேலும்...