முரண்டு பிடித்த போலீஸ் – போராடி வென்ற ஆத்தியா ஃபிர்தவ்ஸ் !

லக்னோ (12 ஜூன் 2020): மத வெறுப்பூட்டும் வகையில் பேசிய மருத்துவர் அரத்தி தேவ் லால்சந்தானி (Arati Dave Lalchandani) மீது வழக்கு தொடுக்க போலீஸ் மறுத்தபோதும் சட்ட நுணுக்கங்களை கூறி வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளார் கேம்பஸ் ஃப்ரண்ட்டைச் சேர்ந்த ஆத்தியா ஃபிர்தவ்ஸ். கடந்த ஜுன் 2 அன்று உ.பி. கான்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவத்துறை முதல்வர் மருத்துவர் அரத்தி லால் சந்தானி அதே கல்லூரியின் மருத்துவமனையில் கொரோனா-வுக்காக சிகிச்சை பெற்றுவரும் முஸ்லிம்களை “தீவிரவாதிகள்”…

மேலும்...

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் திடீர் நீக்கம்!

சென்னை (12 ஜூன் 2020): தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த பீலா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, மறுபடியும், ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர் பீலா ராஜேஷ் ஐஏஎஸ் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார். வருவாய் நிர்வாகத்தில் கமிஷனராக உள்ள ராதாகிருஷ்ணன்…

மேலும்...

கொரோனா வைரஸ் – இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி!

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட நாடுகளில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்தியா கடந்த 1ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 10 ஆயிரம் என்ற பாதிப்பு எண்ணிக்கையை சந்தித்து வருகிறது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி பாஜக தலைவர் சஞ்சய் சர்மா பலி!

புதுடெல்லி (11 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி பாஜக தலைவர் சஞய் சர்மா உயிரிழந்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி பாஜகவின் சேர்மன் கமிட்டி தலைவராக இருந்த சர்மா, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். சஞ்சய் சர்மா மறைவுக்கு டெல்லி பாஜக பொதுச் செயலாளர் ராஜேஷ் பாட்டியா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஊரடங்கு காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த…

மேலும்...

எதையும் மறைக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சேலம் (11 ஜூன் 2020): கொரோனா மரணம் குறித்த தகவல்கள் எதையும் அரசு மறைக்கவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது….

மேலும்...

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை!

புதுடெல்லி (11 ஜூன் 2020): மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் பயனாளிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சி.ஜி.எச்.எஸ். என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் கவர்னர்கள் மற்றும் துணை கவர்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளின் இந்நாள்…

மேலும்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி!

திருப்பதி (11 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு காரணமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் ரூ.3,000க்கு விற்கப்பட்டுள்ளன. தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரிடையாக பெற மிக நீண்ட வரிசையில்…

மேலும்...

தொடரும் கொரோனா அறிகுறி இல்லா மரணங்கள் – அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லா மரணங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும், அரசு மருத்துவமனையிலிருந்து 12 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும்…

மேலும்...

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி: முதல்வர் உத்தரவு!

சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி, தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மருத்துவர்களின் பணிக்காலத்தை நீட்டித்தும், கூடுதல் மருத்துவர்களை பணி அமர்த்தியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக 1,239 மருத்துவர்கள் உள்பட 2,834 மருத்துவ பணியாளர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்….

மேலும்...

சென்னையில் இதுவரை ஐந்து கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்!

சென்னை (10 ஜூன் 2020): சென்னையில் ஏற்கனவே நான்கு கொரோனா நோயாளிகள் தப்பியோடிய நிலையில் தண்டையார் பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35 சிறுவர்களுக்கு, கடந்த 7-ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிருந்து, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர் தப்பியோடியுள்ளார். ஏற்கனவே, சென்னை ராஜீவ் காந்தி…

மேலும்...