திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என,…

மேலும்...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

புதுடெல்லி (08 ஜூன் 2020): டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளர். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அதன்பிறகு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவர் எந்தக் கூட்டத்திலும்…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு!

ஐதராபாத் (08 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், தற்போது தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடத்தாமல் ஏற்கனவே நத்தப்பட்ட உள் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வில் தேர்ச்சி…

மேலும்...

சென்னை குறித்து அதிர்ச்சித் தகவல் – பிரபல பத்திரிகையாளரின் பதற வைக்கும் பேட்டி!

சென்னை (08 ஜூன் 2020): சென்னையில் பரவும் கொரோனா குறித்தும், வெளியில் சுற்றாதீர்கள், மருத்துவமனைகளில் உரிய படுக்கைகள் இல்லை என்று கண்ணீர் உடன் பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ஒரு முக்கியமான விஷயம். இன்று காலை எனக்கும், என் தம்பிக்கும்…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு!

சென்னை (08 ஜூன் 2020): பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்கக் கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் விஸ்வரூப உயர்வு!

புதுடெல்லி (08 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் மொத்த நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 7,135 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திங்கள்கிழமை காலை முடிவடைந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப்…

மேலும்...

ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை!

புதுடெல்லி (07 ஜூன் 2020): நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்‍கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டது. தற்போது 5-ம் கட்டமாக வரும் 30-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன்…

மேலும்...

கொரோனா அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுமா?

சென்னை (07 ஜூன் 2020): கொரோனா அறிகுறி இருந்தால் அந்த மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்கள், ஆசிரிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை அவசியம் என தெரிவித்துள்ளது. பள்ளி நுழைவாயிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு 97 டிகிரி வரை வெப்பநிலை…

மேலும்...

சென்னை கொத்தவால் சாவடி மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மொத்தம் 1,458 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2…

மேலும்...

கொரோனா மோசமாக பாதித்த உலகின் ஐந்தாவது நாடானது இந்தியா!

புதுடெல்லி (07 ஜூன் 2020): இந்தியா கொரோனா மோசமாக பாதித்த ஐந்தாவது நாடாக மாறியுள்ளது. கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது 2,46,628 நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளுடன், ஐந்தாவது மோசமான நாடாக மாறியுள்ளது, இதன் மூலம் ஸ்பெயினின் எண்ணிக்கையை முந்தியுள்ளது. சமீபத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,929 ஆக உள்ளது. எவ்வாறாயினும், உணவகங்கள், வணிக…

மேலும்...