விடுமுறையில் ஊர் சென்று துபாய் திரும்பி செல்ல இயலாதவர்களுக்கு முக்கிய தகவல்!

துபாய் (03 ஜூலை 2021): கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE), இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், விடுமுறைக்கு இந்தியா வந்து மீண்டும் அமீரகம் திரும்பிச் செல்ல முடியாமல் தவிப்போருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் Residence visa புதுப்பித்துக் கொள்ள ஒரு வலைதளம் அறிவித்துள்ளது. அதன் மூலம், அமீரகத்திற்கு வெளியே உள்ளோர் எந்தவிதக் கட்டணமும் இன்றி, இருந்த இடத்திலேயே எளிதாக  தங்களுடைய இணையம் மூலம் விசாவை புதுப்பித்து கொள்ளலாம்….

மேலும்...

தமிழ்நாடுதான் டாப், டெல்லி, பீகார் படுமோசம் – ஆய்வறிக்கை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா 2ஆம் அலையை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறப்பாக கையாண்டதாகவும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமாகக் கையாண்டு உள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை கூடச் சென்றது. ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக…

மேலும்...

கோவேக்சின் 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது – 3 ஆம் கட்ட பரிசோதனை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என்றும் டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது….

மேலும்...

சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமான போக்குவரத்துக்கு மீண்டும் தடை!

ரியாத் (03 ஜூலை 2021): ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் சவுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. கோவிட்டின் மரபணு மாற்றப்பட்ட புதிய வகை வைரஸ்கள் பரவலை அடுத்து, இந்த அறிவிப்பை சவூதி அரேபியா அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை (ஜூலை 4, 2021) இரவு 11 மணி முதல் நடைமுறைக்கு வரும்….

மேலும்...

கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் – ஆய்வு தகவல்!

புதுடெல்லி 02 ஜுலை 2021): இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது ட்விட்டரில் இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் என்பதாக அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகம் (சி.எம்.யூ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா கொரோனா இரண்டாவது அலை பாதிப்பிலும், கடுமையான ஆக்ஸிஜன் நெருக்கடியையும் எதிர்கொண்டிருந்த நேரத்தில் #IndiaNeedsOxygen மற்றும் #PakistanStandsWithIndia போன்ற ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தன. இவற்றின் அடிப்படையில், ஏப்ரல் 21 முதல் மே 4 வரையிலான இதுபோன்ற 300,000 க்கும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை!

துபாய் (02 ஜுலை 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் குடிமக்கள், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப் பட்டுள்ளது. விடுமுறைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வருவதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்ல ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு…

மேலும்...

12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு விற்று ஆச்சரியப்படுத்திய ஏழைச் சிறுமி!

ஜார்கண்ட் (30 ஜூன் 2021): ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன் இல்லாத ஏழை சிறுமியிடம் வெறும் 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கி போன் வாங்க உதவி புரிந்துள்ளார் தொழிலதிபர் ஒருவர். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் ஸ்மார்ட் போனில் வகுப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி துளசி குமாரி, ஆன்லைன் மூலம் படிக்க ஸ்மார்ட்போன் இல்லாமல்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகம் – 5 நாடுகளுக்கான பயணத் தடை ஜூலை 21 வரை நீட்டிப்பு!

துபாய் (30 ஜூன் 2021): ஐக்கிய அரபு அமீரகம் 5 நாடுகளுக்கான பயணத் தடையை ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது. எதிஹாத் ஏர்வேஸை மேற்கோள் காட்டி கலீஜ் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும். பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எதிஹாத் ஏர்வேஸ் தனது டிவிட்டரில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும்...

தமிழ் நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 118 பேர் பலி!

சென்னை (30 ஜூன் 2021): கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 118 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் செவ்வாயன்று 4,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

மேலும்...

இந்தியாவிற்கு வரும் மாடர்னா கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி (29 ஜூன் 2021): இந்தியவிற்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள சிப்லா மருந்து நிறுவனத்திற்கு மாடர்னா கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...