இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (18 மார்ச் 2020): இந்திய ராணுவத்திலும் கொரோனா வைரஸ் நோய் நுழைந்துவிட்டது. கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 வரை விடுப்பில் இருந்த சிப்பாயின் தந்தை ஈரான் சென்று திரும்பியதாகவும், அவரின் தந்தை வழியே இவருக்கு தொற்று பரவியிருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) செவ்வாயன்று இந்தியா தற்போது 2-வது கட்டத்தில் உள்ளது, வைரஸ் தொற்றுநோயின் 3-வது கட்டத்தில் இல்லை என்று வலியுறுத்தியது. நிலைமையைச் சமாளிக்க ICMR சோதனைக்கு…

மேலும்...

கொரோனாவிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை எடுக்கும் முன்மாதிரி கிராமம்!

தஞ்சாவூர் (18 மார்ச் 2020): அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செந்தலை பட்டினம் கிராமத்து மக்கள், தங்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி ஊரை விட்டு வெளியூருக்குச் சென்று திரும்பி வரும் கிராம மக்கள்…

மேலும்...

கொரோனாவுக்காக மாட்டு சிறுநீர் கொடுத்த பாஜக நிர்வாகி கைது!

கொல்கத்தா (18 மார்ச் 2020): கொரோனா வராது எனக்கூறி, சீருடையில் இருந்த பாதுகாவலருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு கொல்கத்தா பாஜக நிர்வாகியான நாராயணன் சாட்டர்ஜி என்பவர், மாட்டு மூத்திரம் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கொரோனா வராது என்று கூறி அனைவருக்கும் மாட்டு சிறுநீர் கொடுத்துள்ளார். மேலும் சீருடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் மாட்டு மூத்திரம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக…

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் 148 ஆக உயர்வு!

புதுடெல்லி (18 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 148 ஆக உயர்ந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய கணக்கின்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவாமல் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகள், கல்லுரிகள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுக் கூட்டங்களுக்கும் தடை…

மேலும்...

டெல்லியில் குவியும் நோயாளிகள் – திணறும் மருத்துவமனைகள்!

புதுடெல்லி (18 மார்ச் 2020): டெல்லியில் காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 139 ஐ தொட்டுள்ளது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கொரோனா அறிகுறிகளுன் பொது மக்கள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் வரும் நோயாளிகளில் கேட்கப்படும் கேள்விகள்…

மேலும்...

சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு!

ரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது….

மேலும்...

கொரோனா எதிரொலி – ஈரானில் மேலும் 85000 கைதிகள் விடுதலை!

தெஹ்ரான் (17 மார்ச் 2020): சீனா இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. அந்த வகையில் ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 11,178 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டுச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ்…

மேலும்...

கோவையில் அதிர்ச்சி – கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

கோவை (17 மார்ச் 2020): கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. அந்த குழு தாய்லாந்து திரும்பிச் செல்ல இருந்த நிலையில் இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

மும்பை (17 மார்ச் 2020): கொரோனா பாதித்தவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 3 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 100 ஐக் கடந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் 64 வயது மதிக்கத்தக்கவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூறை எட்டியதும் வைரஸ் பரவல் மிக வேகமாகக் கூடத் தொடங்கியுள்ளது. அந்த நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்த மிகவும் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்தியா இதுவரை சிறப்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல்…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

சியாட்டில் (17 மார்ச் 2020): அமெரிக்காவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி முயற்சியில் தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை பரிசோதனை முயற்சியாக ஒருவருக்குத் தடுப்பூசியாகச் செலத்தியுள்ளனர். இது இந்த நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வேட்டையைத் துவக்கி வைத்துள்ளது. சியாட்டில் நகரிலிலுள்ள கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Kaiser Permanente Washington Research Institute) விஞ்ஞானிகள், வெகு குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசியை திங்களன்று தன்னார்வலர் ஒருவரின் கையில் கவனமாகச் செலுத்தி தங்களது முதல் கட்ட…

மேலும்...