துன்புறுத்தப்படும் பத்திரிகையாளர்களும் பாஜக ஆட்சியும்!

புதுடெல்லி (26 டிச 2020) பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை ‘தி வயர்’ இன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை காட்டுகிறது. இதுகுறித்த அந்த அறிக்கையின்படி, நாட்டில் கொரோனா காலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 55 பத்திரிகையாளர்கள் 2020 மார்ச் 25 முதல் மே 31 வரை கைது செய்யப்பட்டனர். பல ஊடக ஊழியர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர். சொத்துக்கள் , வாகனங்கள் மற்றும் கேமராக்கள் அழிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், சித்திக் கப்பன்…

மேலும்...

நிதிஷ்குமாருக்கு ஆப்பு வைத்த பாஜக!

பாட்னா (26 டிச 2020): அருணாச்சல பிரதேசத்தில், நிதீஷ் குமாரின் ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பீகாருக்குப் பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் நிதீஷ் குமார் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதன்மூலம் 7 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த நிதிஷ்குமார் கட்சியில் இப்போது ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார். இதற்கிடையில், அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் உறுப்பினர் உட்பட 48 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் உள்ளனர்.

மேலும்...

காஷ்மீர் தேர்தலின் மூலம் ஜனநாயகம் வென்றது: உமர் அப்துல்லா!

ஸ்ரீநகர் (24 டிச 2020): காஷ்மீர் 288 மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தல் முடிவுகள் உண்மையான ஜனநாயக வெற்றியை காட்டுகிறது என்று பாஜகவுக்கு உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 288 மாவட்ட கவுன்சில்களுக்கான (டி.டி.சி) முதல் தேர்தலில் 112 இடங்களை ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) வென்றுள்ளது. பாஜக 75 இடங்களை மட்டுமே வென்றது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சியின் (என்.சி) துணைத் தலைவர் உமர்…

மேலும்...

மேற்கு வங்கத்தை குஜராத் ஆக மாற்ற அனுமதிக்க முடியாது – மம்தா பானர்ஜி!

கொல்கத்தா (24 டிச 2020): மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும் பாஜக மீது கடுமையாக சாடிய மம்தா  “நாங்கள் எங்கள் மண்ணை மதிக்கிறோம். அதைப் பாதுகாப்பது எங்கள் கடமை.  குஜராத் ஆக  மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று மம்தா பானர்ஜி கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற வாரம் மேற்கு வங்கம்  வந்தபோது திரிணாமுல் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான…

மேலும்...

மேற்கு வங்கத்தில் 200 இடங்களை பாஜக வெல்ல தவறினால் பாஜக தலைவர்கள் ராஜினாமா செய்ய தயாரா?

புதுடெல்லி (23 டிச 2020); : மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களை வெல்லத் தவறினால் ராஜினாமா செய்வோம் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளிக்குமாறு பிரசாந்த் கிஷோர் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார். “வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 100 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். பாஜகவின் வெற்றி அதற்கு மேல் இருந்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகுவேன்.” என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில்…

மேலும்...

முதலாக்கை ஒழித்த பாஜக என்னை விவாகரத்துக்கு தூண்டியுள்ளது – பாஜக எம்.பி. மனைவி அதிரடி!

முத்தலாக்கை ஒழித்ததாக சொல்லும் பாஜக என்னை விவாகரத்து செய்யுமாறு என் கணவரை வலியுறுத்துகிறது என்று பாஜக எம்.பி சௌமித்ரா மனைவி சுஜாதா தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. சௌமித்ரா கானின் மனைவி சுஜாதா மண்டல் கான் பஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, சுஜாதாவுக்கு சௌமித்ரா கான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள சுஜாதா “தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் நுழைந்தால், அது உறவுகளுக்கு நல்லதல்ல. எனக்கு எதிராகத் தூண்டிவிடும் பாஜகவின் தவறான நபர்களுடன்…

மேலும்...

கத்தாரில் கோவிட் 19 தடுப்பூசி போடப்படும் பணி டிசம்பர் 23 முதல் தொடக்கம்!

தோஹா (22 டிச 2020): கத்தாரில் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்டம் (புதன்கிழமை) நாளை தொடங்கும் என்று கத்தார் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசிகள் முதல் கட்டமாக, நாளை டிசம்பர் 23 துவங்கி ஜனவரி 31 வரை துரிதமாக போடப்படும். முதல் கட்ட தடுப்பூசிகள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் அதிரடி திருப்பம் – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்பி மனைவி!

கொல்கத்தா 921 டிச 2020): மேற்கு வங்க பாஜக எம்பி சவுமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டல் கான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். முன்னாள் ஆசிரியரான சுஜாதா கான் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறி பாஜகவை விட்டு வெளியேறினார். ‘எனக்கு ஆறுதல் தேவை, எனக்கு மரியாதை தேவை. நான் ஒரு திறமையான கட்சியின் திறமையான தலைவராக இருக்க விரும்புகிறேன். பாஜகவில் அது இல்லை. அதில் தவறான மற்றும் ஊழல் தலைவர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள்….

மேலும்...

அதிமுகவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் போர்க்கொடி!

சென்னை (21 டிச 2020): எல் முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவை தொடர்ந்து விமர்சித்துவிட்டு பின்பு அப்படியில்லை எண்டு மழுப்புவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கிடையே கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, மிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2 ஆயிரத்தை நம்பி 5…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணிக்குள் மோதல் – தமிழக பாஜக தலைவரை நீக்க அதிமுக கோரிக்கை!

சென்னை (20 டிச 2020): எல் முருகன் சச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதால் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே நேற்று…

மேலும்...