காங்கிரசின் செயல்பாடுகளால் அதிர்ச்சியில் உள்ள ஸ்டாலின்!

சென்னை (15 மார்ச் 2021): தலைவிரித்தாடும் காங்கிரஸ் கட்சி பூசலால் திமுக கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் பெரிய கட்சியாக கணிக்கப்படும் காங்கிரஸ் தற்போது வலுவிழந்து இருப்பதால் சீட் கொடுப்பதில் ஸ்டாலின் ஆரம்பம் முதலே கறாராக இருந்தார். எனினும் அதிக சீட்டுக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியது. ஒருவழியாக 25 சீட்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் உட்பூசலால்…

மேலும்...

முதல்வரை எதிர்க்கும் வேட்பாளர் தேர்வில் திமுகவினர் படு அப்செட்!

சென்னை (15 மார்ச் 2021): முதல்வர் எட்டப்பாடியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தேர்வில் திமுகவினர் அப்செட்டாக உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எட்டப்பாடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சம பலமுள்ள வேட்பாளரை திமுக களமிறக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சம்பத்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பட்டதாரி இளைஞரான சம்பத்குமார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார். எனினும், தொகுதியில்…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி அறிக்கை!

சென்னை (14 மார்ச் 2021): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போன்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்” எனக் குறிப்பிட்டு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள – வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும்;…

மேலும்...

அந்த ஜாதியால்தான் அங்கு போட்டியிடவில்லை – கமல் பகீர் தகவல்!

சென்னை (14 மார்ச் 2021): மயிலாப்பூரில் போட்டியிடாததற்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து கமல்ஹாசன் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் ஜாதியோடு என்னை இணைத்து சொல்லிவிடுவார்கள், அது எனக்கு பிடிக்காத விஷயம்…

மேலும்...

திமுக அதிருப்தியாளர்களை அலேக்காக தூக்க பாஜக அதிரடி பிளான்!

சென்னை (14 மார்ச் 2021): சீட் கிடைக்காத திமுக பிரமுகர்களை பாஜக பக்கம் இழுக்க அமித்ஷா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாஜக பக்கம் தாவுவது வழக்கமாகி வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ இதுவே காரணமாக அமைந்தது. இதனை தமிழகத்திலும் நிறைவேற்ற பாஜக முயன்று வருகிறது. இதற்கு வலுவாக இருக்கும் திமுகவை குறி வைத்து அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார். திமுகவில் அறிவிக்கப்பட்ட…

மேலும்...

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

திருவனந்தபுரம் (14 மார்ச் 2021): கேரளாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேர்தலில் போட்டியிடப் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. . 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 92 இடங்களில் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக 25 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை இந்தியன் யூனியன்…

மேலும்...

பாஜகவுக்கு தாவி ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ!

சென்னை .(14 மார்ச் 2021): தமிழகத்தில் தேர்தல் பிடித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தது. இதில் திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மருத்துவர் சரவணன். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

மேலும்...

பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்தால் இதுதான் நடக்கும் – கண்ணீர் விட்ட அதிமுக எம்.எல்.ஏ!

சென்னை (13 மார்ச் 2021): பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்ததால் தான் இத்தனை பிரச்சனையும் என்று அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாகியுள்ளன. இதில் வாணியம்பாடி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த நிலோபர் கபிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக…

மேலும்...

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது மகிளா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பரபரப்பு புகார்

சென்னை (12 மார்ச் 2021): தமிழக காங்கிரஸ் கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஒருவருக்கு கூட டெபாசிட் கிடைக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மகிளா தலைவர் ஜான்சிராணி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “நிலக்கோட்டை தொகுதி மக்களால் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களுக்கு அயராது தொண்டாற்றி, காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மிளிர்ந்த எனது பாட்டி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களை சிறு வயது முதல் பார்த்து…

மேலும்...

திமுக வேட்பாளர் மீது போட்டி திமுகவினர் கல் வீச்சு!

விருகம்பாக்கம் (12 மார்ச் 2021) : விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் மீது போட்டி திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பரபரப்புகளுக்கிடையே இன்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆதரவு கேட்டு சென்றபோது திமுக நிர்வாகி தனசேகரனின் ஆதரவாளர்கள் பிரபாகர் ராஜா மீது கற்கள்…

மேலும்...