தவறே செய்யாதவர்களை சிறையில் அடைத்தது யாரை திருப்திப் படுத்த? -நவாஸ் கனி கேள்வி!

சென்னை (12 ஏப் 2020): இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்தவர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது, என்று இ.யூ முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த 8 பேர் (4 பெண்கள்) உட்பட 11 பேர் மீது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்துக்குரியது. ஊரடங்கு உத்தரவு வருவதற்கு…

மேலும்...

விஷக்கிருமிகளோடு விஷப்பிரச்சார மீடியாக்கள் – காதர் மொகிதீன் கடும் கண்டனம்!

சென்னை (12 ஏப் 2020): விஷக்கிருமி பரவலுக்கு எதிராகப் போராடும் இத்தருணத்தில் விஷக் கருத்துக்களை பரப்பி விவாதித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “உலகத்தையே பேரிடராக அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய கொரோனா வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டில் மத்திய…

மேலும்...

கையில் லத்தியுடன் சோதனைச் சாவடியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் அடாவடி!

ஐதராபாத் (12 ஏப் 2020): தெலுங்கானாவில் ஒரு சோதனைச் சாவடியில் கையில் லட்தி ஏந்தி வாகன ஓட்டிகளிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் காவல்துறையினர் இருக்க அவர்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவ்வழியே செல்லும் வாகனங்களை சோதனை செய்வதுபோல் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் பலர் காவல்துறையை குறிச்சொல் செய்து குடிமக்களின் ஆவணங்களை சரிபார்க்க RSS-க்கு அனுமதி…

மேலும்...

இனி விசா வழங்கப்பட மாட்டாது – அமெரிக்க அதிபர் திடீர் உத்தரவு!

வாஷிங்டன் (12 ஏப் 2020): அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டினரை உடனடியாக அழைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். விசா தடைகள் தொடர்பாக டிசம்பர் 31 வரை நடைமுறையிலுள்ள வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ள டிரம்ப், தங்கள் குடிமக்களைத் திரும்ப அழைக்க மறுத்தாலோ அல்லது காரணமின்றித் தாமதித்தாலோ அந்த நாடுகள், அமெரிக்காவுக்குப் பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளா். மேலும் அமெரிக்காவிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைத்…

மேலும்...

முஸ்லிம்களை தவறாகச் சித்தரித்த ரிபப்ளிக் டிவி, நியூஸ் 18 – மன்னிப்பு கேட்டது ரிபப்ளிக் டிவி!

புதுடெல்லி (12 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவலை விட முஸ்லிம்களுக்கு எதிரான பொய் விமர்சனங்களே அதி வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் அர்ணாப் கோஸ்வாமி தலைமை ஆசிரியராக பணிபுரியும் ரிபப்ளிக் டிவி முதலிடம் வகிக்கிறது. முஸ்லிம்களை தவறாக சித்தரிப்பதில் அர்ணாப் முதலிடம் வகிக்கிறார். பலமுறை உண்மைக்குப் புறம்பான தகவல் என்று நிரூபணம் ஆனாலும் தொடர்ந்து இத்தகைய செயல்களில் அர்னாப் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில்தான் ரிபப்ளிக் டிவியின் ஒரு விவாத நிகழ்ச்சியில்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் மரணம் – பலி எண்ணிக்கை11 ஆக உயர்வு!

சென்னை (12 ஏப் 2020): கொரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45…

மேலும்...

தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு ஆலோசனை!

சென்னை (11 ஏப் 2020): ஊரடங்கை அதிகரிக்கும் பட்சத்தில் தமிழக அரசு சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி  எம்.எல்.ஏ  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வரும் நிலையில், இக்கால கட்டத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் அரசு உரிய கவனம் செலுத்தும் என…

மேலும்...

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டிய தன்னார்வ அமைப்பு!

கரூர் (11 ஏப் 2020): லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்கனவே காய்கறிகளை இலவசமாக கொடுத்து வந்த வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் தற்போது ஆதரவற்ற 150 நபர்களுக்கு அத்யாவசிய பொருட்களை கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, 144 ஊரடங்கு தடை உத்திரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில், தமிழகத்தில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர…

மேலும்...

கொரோனா வைரஸ் லாக்டவுன்: நூற்றுக் கணக்கானோருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக தலைவர்!

பெங்களூரு (11 ஏப் 2020): உலகமே கொரோனாவால் திண்டாடிக் கொண்டிருக்க எதைப் பற்றியும கவலைப்படாமல் தனது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டடியுள்ளார் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. ஜெயராம். தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் மத பிரார்த்தனைக் கூட்டங்களைக்கூட அனைத்து…

மேலும்...

புறக்கணிக்கப் பட்ட தஞ்சை மருத்துவக் கல்லூரி!

தஞ்சாவூர் (11 ஏப் 2020): தமிழகத்தின் இரண்டாவது பெரிய மருத்துவக் கல்லூரியான தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக் கூடம் இல்லாதது துரதிர்ஷ்டம் என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர். கொரோனா வைரஸ் உலக அளவிலும், இந்தியாவிலும் பெரிய அளவில் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வுக்கூடம் இல்லாமல் அப்பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய அவர்களின் ரத்தம் மற்றும் உமிழ் நீர் மாதிரிகள் 108…

மேலும்...