கொரோனா வைரஸ் தொற்றில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி (25 மே 2020): உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. கொரோனா பரவல் உலகை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட, கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியா நேற்றுவரை 11-வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை..!

புதுடெல்லி (24 மே 2020): இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும், இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாக 6,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் பலியாகி உள்ளனர். 54,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத…

மேலும்...

இந்தியாவின் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம்!

வாஷிங்டன் (21 மே 2020): இந்தியாவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க செயிண்ட் பால் நகரசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் மிகைத்து நிற்கும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் உலக அளவில் பேசுபொருளாக உள்ளது. சமீபத்தில் கொரோனா பரவலில் இஸ்லாமியர்களை மையப்படுத்தி காய் நகர்த்திய இந்திய அரசின் நடவடிக்கைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என எல்லாவகைகளிலும் முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவை அரபு நாடுகளின் பார்வைக்குச்…

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை!

துபாய் (19 மே 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளன. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசினைத் தொடர்பு கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு தெரிவித்திருந்தனர். அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும், இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் காழ்ப்புணர்ச்சிப் பதிவுகள்…

மேலும்...

இஸ்லாமிய எதிர்ப்பு கருத்து எதிரொலி – நியூசிலாந்தில் இந்திய தலைவர் அதிரடி நீக்கம்!

புதுடெல்லி (16 மே 2020): இஸ்லாத்திற்கு எதிராக சமூக வலைதலங்களில் கருத்து தெரிவித்த இந்தியர், காந்திலால் பகபாய் படேல் என்பவரை வெலிங்டன் புகழ் பெற்ற நீதி மற்றும் அமைதி சங்கம் (Wellington Justice of Peace Association ), அச்சங்கத்தின் அனைத்து பதவியகளிலிருந்தும் நீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும்…

மேலும்...

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 85,940 ஆக அதிகரித்துள்ளது. இது சீனாவை விட அதிகமாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 85 ஆயிரத்து 940 -ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்‍கை 2 ஆயிரத்து 753-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 ஆயிரத்து 258 பேர் குணம‌‌டைந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 29 ஆயிரத்து 100 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்….

மேலும்...

ஜாகிர் நாயக்கை ஒப்படைக்கக் கோரி மலேசியாவுக்கு இந்தியா கோரிக்கை!

புதுடெல்லி (15 மே 2020): ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி மலேசியாவிடம் இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத பிரச்சாரகர் ஜாகிர் நாயக் கடந்த மூன்று வருடங்களாக மலேசியாவில் வசித்து வருகிறார். டாக்காவில் கடந்த் அ2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை அவர் மீது பதிவு செய்துள்ள நிலையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி. இந்திய அரசு முறையாக கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர்…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 2894 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (10 மே 2020): இந்தியாவில், நேற்று ஒரே நாளில், 2894 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,808 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, வரும் 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக,…

மேலும்...

சவூதியிலிருந்து 152 பயணிகளுடன் முதல் விமானம் இந்தியா புறப்பட்டது!

ரியாத் (08 மே 2020): சவூதி அரேபியாவிலிருந்து 152 பயணிகளை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு புறப்பட்டது. கொரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் இந்தியா புறப்பட்டது. நேற்று மாலை இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 354 பயணிகளுடன் கேரள மாநிலம் கொச்சி சென்றடைந்தது. இந்நிலையில்…

மேலும்...

இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவு – கனடாவிலும் இந்துத்வா ஆதரவாளர் மீது நடவடிக்கை!

டொரொண்டோ (06 மே 2020): சமூக வலைதளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுக்காக கனடாவில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்வாவினர் நடத்தும் அத்துமீறல்கள், அடக்குமுறைகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அரபு நாடுகளில் உள்ள அரபியர்கள், அதிகாரிகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவில் ரவி என்பவர் இஸ்லாமிற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிந்த பதிவிற்காக அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா…

மேலும்...