திமுக மீது முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி!

சென்னை (02 ஜன 2021): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் ஆசாதுதீன் ஒவைசியை அழைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், திமுகவின் முடிவு குறித்து அதன் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் அதிருப்தி அடைந்துள்ளது. லீக்கைத் தவிர,திமுக ஏ கூட்டணியில் உள்ள இதர முஸ்லிம் கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவைசி மற்றும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக செய்திகள்…

மேலும்...

குஷ்புவை கழட்டி விட பாஜகவின் பலே திட்டம்!

சென்னை (17 டிச 2020): 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக பாஜகவின் சார்பில் குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்கிற கணிப்புகள் உள்ள நிலையில், அதிமுகவுடன் தான் கூட்டணி என்பது பாஜகவில் உறுதியாகிவிட்டது. தமிழக பாஜகவும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது….

மேலும்...

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது…

மேலும்...

நாளை உருவாகும் புதிய புயல்!

சென்னை (30 நவ 2020):நாளை காலை புதிய புயல் உருவாகஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த…

மேலும்...

நிவர் புயலும் தமிழகமும் – முதல்வர் பெருமிதம்!

சென்னை (28 நவ 2020): அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு அவர் தெரிவித்ததாவது : அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும்…

மேலும்...

நிவர் போனாலும் இன்னொரு புயல் – தமிழகத்திற்கு அடுத்த புயல் எச்சரிக்கை!

சென்னை (27 நவ 2020): நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. வங்ககடலில் 23ம் தேதி உருவான நிவர் புயல் நேற்று (26ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது.. இந்த புயல் திருவண்ணாமலை, வேலூர் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு சென்றது. இதனால் புதுவை மற்றும் விழுப்புரம், சென்னை…

மேலும்...

குறைந்து வரும் கொரோனா – தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல்!

சென்னை (21 அக் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 857 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,91,754 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 263 பேருக்கு கொரோனா…

மேலும்...

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு!

சென்னை (10 அக் 2020): கொரோனா பரவல் சென்னையில் மீண்டும் அதிக அளவில் உள்ளதால் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்படும் மக்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தளர்வுகளை அளித்துள்ளது தமிழக அரசு. கொரோனா பரவல் நூற்றுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டிருந்த போது நாம் முழு பொதுமுடக்கத்தில் இருந்தோம். தற்போது அனுதினமும் ஆயிரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. இந்த சமயம் தளர்வுகளோடு இருக்கிறோம். எனில், நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பாக நடந்து…

மேலும்...

இவ்வருடம் எப்படி?- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை (29 செப் 2020): இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின்(LA-NINA, IOD) அடிப்படையில் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய…

மேலும்...

தமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

சென்னை (29 செப் 2020): தமிழகத்தில் இப்போதைக்கு சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று தேர்தல்…

மேலும்...