மத உணர்வை காயப்படுத்தியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு!

மும்பை (04 மே 2020): மத உணர்வை காயப்படுத்தியதாக ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி ஊடகத்தில் பேசிய அர்ணாப், பந்தாரா ரெயில்வே நிலையம் அருகில் பொது மக்கள் கூடியதாக பேசிய அர்ணாப் கோஸ்வாமி அவசியமில்லாமல் ஜும்மா மசூதியை குறிப்பிட்டு பேசினார். இது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்தது. இதுகுறித்து கல்விச் சங்கத்தின் செயலாளர் இர்ஃபான் அபூபக்கர் சேக் மும்பை பைடோனி காவல்…

மேலும்...

ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழான ரஷ்யா!

மாஸ்கோ (04 மே 2020): ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10,633 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலககை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் முதல் 10 நாடுகளில் ரஷ்யாவும் உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷ்யா இருந்தது. ஒரே மாதத்தில் அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில்…

மேலும்...

அலற வைக்கும் கொரோனா – ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பாதிப்பு!

சென்னை (03 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,341 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 203 பேரை…

மேலும்...

இதையெல்லாம் நாங்கள் கேட்டால் அரசியல் என்பார் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சென்னை (03 மே 2020): ஊரடங்கிலும் டெண்டர் முறைகேட்டில் முதல்வர் எடப்பாடி படு பிசியாக உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை நாம் சுட்டிக்காட்டினால், “பேரிடர் நேரத்தில் கூடவா அரசியல்” என்று அப்பாவித்தனமாக ஒரு…

மேலும்...

கொரோனாவால் அலறும் சென்னை – ஹாட் ஸ்பாட் ஆன கோயம்பேடு!

சென்னை (03 மே 2020): கடந்த 4 நாட்களாக சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு காய்கறிகளை வாங்க வேண்டும் என்று கோயம்பேடு மட்டுமல்லாமல் மற்ற காய்கறி சந்தையிலும் மக்கள் குவிந்தனர். அதன் விளைவாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. அதன் தாக்கத்தை சுகாதாரத்துறை வெளியிடும் பாதிப்பு விவரத்தில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. இந்த 10…

மேலும்...

முன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்!

புதுடெல்லி (03 மே 2020): நலிந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவிட தொடங்கப்பட்டுள்ள நலநிதிக்கு முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்டோர் நிதி அளிக்க முன்வந்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தங்கள் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். அந்தப் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஐசிஏ) சார்பில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் வீரர்களுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஐசிஏ சார்பில் 10 லட்ச ரூபாய்…

மேலும்...

புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு!

கிருஷ்ணகிரி (03 மே 2020): ஆந்திராவின் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது. இந்நிலையில் ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரியை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சை மண்டலமாக உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….

மேலும்...

கமல் விஜய்சேதுபதி இடையே காரசார வார்த்தைப் போர்!

சென்னை (03 மே 2020): கமலின் கருத்துக்கள் புரியவில்லை என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு நடிகர் கமல் காரசாரமாக பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் பேச்சோ அல்லது சமூகவலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துக்களோ பலருக்கும் புரியவில்லை என்ற குறை பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது. மே 1அன்று ஊரடங்கு தொடர்பாக அவர் பதிவிட்ட டுவீட் பலருக்கும் புரியவில்லை என்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே நடிகர் கமல் சில விளக்கங்கள் கொடுத்திருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் வாயிலாக நேரலையில் பேசினார் கமல். இவரை…

மேலும்...

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி – மத்திய அமைச்சர் தகவல்!

புதுடெல்லி (03 மே 2020): சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை நிலவி வருகிறது. இந்நிலையில்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டவாரியாக விவரம்!

சென்னை (03 மே 2020): தமிழகத்தில் இதுவரை 2757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 142 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 88 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 81 பேருக்கும்,…

மேலும்...