எங்கள் மீது மலர் தூவ வேண்டாம் உணவு கொடுங்கள் – மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை!
புதுடெல்லி (05 மே 2020): எங்கள் மீது மலர்கள் தூவ சொல்லி கேட்கவில்லை உணவு தந்தால் போதும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் பணியாளர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடம், சுகாதாரமற்று இருப்பதாகவும்,…