வழிபாட்டுத் தலங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்பட மாட்டாது – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (31 மே 2020): கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீடிநகாணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் அட்டவணை!

சென்னை (31 மே 2020): கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது 01.6.2020 முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. சிறப்பு ரயில்களின் கால அட்டவணை வண்டி எண் 02636 மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 02635 விழுப்புரம் –…

மேலும்...

பிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு!

புதுடெல்லி (30 மே 2020): பிரதமர் கேர் நிதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்ததற்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் என பலரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர். பிரதமர் நிவாரண நிதி PMNRF இருக்கும்போது இப்போ புதுசா எதுக்கு…

மேலும்...

இந்தியாவில் ஜூன் 8 முதல் 30 ஆம் தேதி வரை தளர்த்தப்படும் தளர்வுகள்!

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜூன் 8 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் முதல்கட்ட தளர்வுகள்: *ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி. இரண்டாம் கட்ட தளர்வுகள்: இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும். மூன்றாம் கட்ட தளர்வுகள்:…

மேலும்...

லாக்டவுன் மற்றும் ரம்ஜான் காலங்களில் ஜித்தா முத்தமிழ் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் தொடர் சேவை!

தஞ்சாவூர் (30 மே 2020): ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் கடந்த ஒரு மாதமாக தஞ்சைப் பகுதிகளில் ரமலான் மாத நோன்புகாலத்தில் ஸஹர் எனும் அதிகாலை உணவினை தினமும் சுமார் 400 பேருக்கு தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்க நட்புகளோடும், மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை, இயற்கை அறக்கட்டளை நிர்வாகிகளோடும் இணைந்து கிங்ஸ் கேட்டரிங்ஸ் மூலம் தரமாக சமைத்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனுமதியோடு பெரும்பாலும் அவரவர் இல்லங்கள் சென்றும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் வழங்கி வந்தது. அப்போது…

மேலும்...

நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு!

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு…

மேலும்...

வில்லன் நடிகரின் ஹீரோ சேவை – சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

கொச்சி (30 மே 2020): பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார். கேரளாவில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 167 பேர் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களை ஏர் ஆசியா தனி விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு செல்வதற்கு பேருதவி புரிந்துள்ளார் சோனு சூட். லாக்டவுன் தொடங்கிய காலங்களிலிருந்தே சோனு சூட் மும்பையிலிருந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்துகளில் ஊருக்கு…

மேலும்...

நாட்டு மக்களுக்கு மோடியின் கடிதம் சொல்வது என்ன?

புதுடெல்லி (30 மே 2020): நாடு முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.65 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இந்த நெருக்கடியான காலகட்டத்தில் யாரும் அசாதாரண சூழலை எதிர்கொள்ளவில்லை என கூறிவிட முடியாது. நம் நாட்டின் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், சிறு,குறு உற்பத்தியாளர்கள், கைவினைகலைஞர்கள், வணிகர்கள் என சக இந்தியர்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.“ இந்த நெருக்கடிகள் பேரழிவுகளாக மாறாமல்…

மேலும்...

அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்!

வாஷிங்டன் (30 மே 2020): உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க நடைபெறும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக, ஐ.நா சபையின் கிளை அமைப்பாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் உலக சுகாதார நிறுவனம். சுமார் 194 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகத் தற்போது வரை இருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக…

மேலும்...

தஞ்சை ஆட்சியருடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

தஞ்சை (29 மே 2020): திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் உதவிய பொதுமக்கள் குறித்த விவரங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவை சந்தித்து திமுக மாவட்ட நிர்வாகிகள் அளித்தனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசே செய்துவிட்டதாகவும், தி.மு.க பொய் பிரச்சாரம் செய்வதாகவும், அ.தி.மு.க. அரசின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசியிருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் திரு.ஸ்டாலினின் “ஒன்றிணைவோம் வா” உதவி கோரும் எண்ணிற்கு, வந்த அழைப்பின் படி தஞ்சை மாவட்டத்தில் உதவி கோரிய…

மேலும்...