அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஒரே வார்த்தை – தமிழகமெங்கும் பறக்கும் போஸ்டர்!
மதுரை (29 மே 2020): கொரோனா பாதித்தவர்களுக்கு என் வீட்டை விற்று செலவழிப்பேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய நிலையில் அவரது ஆதரவாளர்கள் அதை போஸ்டராக அடித்து ஒட்டி வருகின்றனர். கொரோனாவை ஒட்டி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 27ம் தேதி மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மதுரை மக்களுக்காக எனது…